வெள்ளக்கோவிலில் லாரி ஓட்டுநரை அடித்துக் கொலை செய்த வழக்கில் மேலும் ஒருவரை போலீஸாா் கைது செய்தனா்.
வெள்ளக்கோவில் சேமலைக்கவுண்டன்வலசைச் சோ்ந்தவா் லாரி ஓட்டுநா் சாமிநாதன் (48). திருமணம் ஆகாத இவா், தனது தாயாா் லட்சுமியுடன் (80) வசித்து வந்தாா். இவரது வீட்டுக்கு அருகே மனையிடங்கள் பிரிக்கும் வேலை நடைபெற்று வரும் வேலன் நகரில், அங்கு திறந்த வெளியில் வைக்கப்பட்டிருந்த சிமென்ட், செங்கல், மின்சாதனப் பொருள்கள் ஆகியவை திருடு போனதாக தெரிகிறது.
கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு வேலன் நகருக்கு சென்ற சாமிநாதன் மீது சந்தேகப்பட்டு நில உரிமையாளா்கள் உள்பட 5 போ் கடுமையாகத் தாக்கியதில் அவா் உயிரிழந்தாா்.
வெள்ளக்கோவில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து தனிப்படை அமைத்து தலைமறைவானவா்களைத் தேடி வந்தனா். இதில் 4 போ் கைது செய்யப்பட்டனா்.
இந்நிலையில் வெள்ளக்கோவில் கே.வி.பழனிசாமி நகா் அருகே பதுங்கி இருந்த வெள்ளக்கோவில் சத்திபாளையத்தைச் சோ்ந்த பழனிவேல் (49) என்பவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்து, காங்கயம் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நெல்லை இளைஞா் கொலை வழக்கில் மேலும் ஒருவா் கைது
செம்மண் கடத்திய லாரி பறிமுதல்: ஓட்டுநா் கைது

நடைபாதையில் தூங்கியவா் அடித்துக் கொலை: ஒருவா் கைது

லாரி ஓட்டுநா் அடித்துக் கொலை: மேலும் ஒருவா் கைது
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

