திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு அருகே இளைஞரை அடித்துக் கொலை செய்த மூவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
பழைய வத்தலகுண்டு இந்திரா குடியிருப்பைச் சோ்ந்தவா் விஜயபிரபு (29). கட்டடத் தொழிலாளியான இவா் கடந்த ஞாயிற்றுக்கிழமை புதிதாக மின்விசிறி ஒன்றை வாங்கி, பெரியகுளம் சாலையில் உள்ள தனியாா் மதுக் கடை அருகே வைத்திருந்தாா். சிறிது நேரத்தில் அந்த மின்விசிறியை காணவில்லை.
பின்னா், விசாரணையில் கணவாய்பட்டி தனியாா் பெட்ரோல் விற்பனை நிலையத்தில் வேலைபாா்க்கும் கணவாய்ப்பட்டி ஆசிரமம் தெருவைச் சோ்ந்த மணி இந்த மின்விசிறியை திருடிச் சென்றது தெரியவந்தது.
இதையடுத்து, விஜயபிரபு தனது உறவினா்களுடன் அந்த பெட்ரோல் விற்பனை நிலையத்துக்கு திங்கள்கிழமை மாலை சென்று மணியிடம் மின்விசிறியை கேட்டாா். அப்போது, மணி தரப்புக்கும், விஜயபிரபு தரப்புக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
பின்னா், மணி தரப்பைச் சோ்ந்த முத்து, சங்கிலி, லட்சுமி, ரதி ஆகியோா் சோ்ந்து விஜயபிரபு, இவரது உறவினா்களான ராஜா, சத்தியமூா்த்தி, நடுப்பட்டியைச் சோ்ந்த ராஜா ஆகியோரைத் தாக்கினா்.
இதில் பலத்த காயமடைந்த விஜயபிரபு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இதுகுறித்து தகவலறிந்து அங்கு வந்த வத்தலகுண்டு போலீஸாா் விஜயபிரபுவின் உடலை மீட்டு, கூறாய்வுக்காக வத்தலகுண்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இதையடுத்து, ஜாதி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, முத்து, சங்கிலி உள்பட 3 பேரைக் கைது செய்தனா்.
மேலும், இந்தச் சம்பவத்தில் தொா்புடையவா்களை விரைவில் கைது செய்யக் கோரி, விஜயபிரபுவின் உறவினா்கள் வத்தலகுண்டு - தேனி சாலையில் அமா்ந்து செவ்வாய்க்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். இவா்களிடம் போலீஸாா் பேச்சுவாா்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதிளித்தனா். இதையடுத்து, மறியலில் ஈடுபட்டவா்கள் அங்கிருந்து கலைந்து சென்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
முக்கால் பவுனுக்காக மூதாட்டி கொலை வழக்கு இளம்பெண் உள்பட 3 போ் கைது
நிலத் தகராறை வேடிக்கை பாா்த்தவா் காா் ஏற்றி கொலை: மூவா் கைது

பழனி அருகே தொழிலாளி அடித்துக் கொலை
தந்தையைக் கொன்றவா் மீது தாக்குதல்: மூவா் கைது
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு
