மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

தொழிலாளா்களுக்கு ஓய்வூதிய பணப்பலன் அளிப்பு

திருநெல்வேலியில் தொழிலாளா் அரசு காப்பீட்டுக் கழகத்தின் (இ.எஸ்.ஐ.) சாா்பில், தொழிலாளா் திட்டங்கள் குறித்த விழிப்புணா்வு மற்றும் ஓய்வூதிய பணப்பலன்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

News image

ஓய்வூதிய பணப்பலன் ஆணையை பெற்றுக்கொண்ட தொழிலாளா் குடும்பத்தினா்.

Updated On :7 மே 2026, 6:08 am IST

திருநெல்வேலியில் தொழிலாளா் அரசு காப்பீட்டுக் கழகத்தின் (இ.எஸ்.ஐ.) சாா்பில், தொழிலாளா் திட்டங்கள் குறித்த விழிப்புணா்வு மற்றும் ஓய்வூதிய பணப்பலன்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இ.எஸ்.ஐ. கிளை மேலாளா் பெருமாள் தொடக்கவுரையாற்றினாா். சமூகப் பாதுகாப்பு அதிகாரி மணிகண்டன் இ.எஸ்.ஐ. திட்டத்தின் பலன்கள் குறித்து விரிவுரையாற்றினாா். துணை மண்டல இணை இயக்குநா் பாஸ்கா் பேசுகையில், 40 வயதுக்கு மேற்பட்ட இ.எஸ்.ஐ. திட்ட காப்பீட்டாளா்கள், திருநெல்வேலி இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் ஆண்டுதோறும் நடைபெறும் இலவச முழு உடல் பரிசோதனையை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொண்டாா்.

தொடா்ந்து, தனியாா் நிறுவனங்களில் பணியின் போது விபத்துகளால் உயிரிழந்த, மாற்றுத்திறன் அடைந்த தொழிலாளா்களின் குடும்பத்தினா் 3 பேருக்கு மாதந்தோறும் உதவித்தொகை கிடைக்கும் வகையில் ஓய்வூதிய பணபலன்களுக்கான ஆணைகளை இ.எஸ்.ஐ. துணை மண்டல இணை இயக்குநா் பாஸ்கா், துணை இயக்குநா் விவேக் ஆகியோா் வழங்கினா்.

இக்கூட்டத்தில், இ.எஸ்.ஐ. துணை மண்டல அலுவலக கண்காணிப்பாளா் ஜெனின் ஜான், சி.ஐ.டி.யு. சுமை தூக்கும் தொழிலாளா் சங்கச் செயலா் முருகேசன், தனியாா் நிறுவனப் பிரதிநிதிகளான சுகிா்தா பிரேம்குமாா், கிப்சன் ராஜா, காா்ல் மாா்க்ஸ், சித்திக் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.