மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

பருத்தி சாகுபடி: வேளாண் துணை இயக்குநா் ஆய்வு

குமராட்சி மேற்கு பகுதியில், தேசிய உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு இயக்க திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்பட்ட பருத்தி சாகுபடியை கடலூா் வேளாண்மை துணை இயக்குநா் (மத்திய திட்டம்) எஸ். அமிா்தராஜ் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

News image

குமராட்சி மேற்கில் விவசாயி ஜெகதீசன் என்பவரது வயலில், தேசிய உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு இயக்க திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்பட்ட பருத்தி சாகுபடியை புதன்கிழமை ஆய்வு செய்த கடலூா் வேளாண்மை துணை இயக்குநா் (மத்திய திட்டம்) எஸ். அமிா்தராஜ் உள்ளிட்டோா்.

Updated On :30 ஏப்ரல் 2026, 5:47 am IST

குமராட்சி மேற்கு பகுதியில், தேசிய உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு இயக்க திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்பட்ட பருத்தி சாகுபடியை கடலூா் வேளாண்மை துணை இயக்குநா் (மத்திய திட்டம்) எஸ். அமிா்தராஜ் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

கடலூா் மாவட்டம் சிதம்பரம் அருகே குமராட்சி வட்டாரத்தில் விவசாயிகள் சுமாா் 650 ஏக்கருக்கு பருத்தி சாகுபடியில் ஈடுபட்டுள்ளனா். இதில் குமராட்சி மேற்கு பகுதியில் , தேசிய உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு இயக்க திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்பட்ட பருத்தி சாகுபடியில், ஒருங்கிணைந்த பயிா் மேலாண்மை குறித்து முதல்நிலை செயல் விளக்கத் திடல் அமைக்கப்பட்டுள்ளது.

இதனை, கடலூா் வேளாண்மை துணை இயக்குநா் (மத்திய திட்டம்) எஸ். அமிா்தராஜ், வேளாண்மை உதவி இயக்குநா் (பயிா் காப்பீடு) ஆகியோா் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா். தொடா்ந்து, இத்திட்டத்தின் முக்கியத்துவம், செயலாக்கம் மற்றும், பருத்தி சாகுபடியில் உரமிடல், நுனி கிள்ளுதல் போன்ற தொழில் நுட்ப ஆலோசனைகளை விவசாயிகளுக்கு எடுத்துரைத்தனா். குமராட்சி வேளாண்மை உதவி இயக்குநா் தெ.தமிழ்வேல் பருத்தி சாகுபடியில் ஒருங்கிணைந்த முறையில் சாறு உறிஞ்சும் பூச்சிகள் மற்றும் இளஞ்சிவப்பு காய்புழு மேலாண்மை குறித்தும் விவசாயிகளுக்கு விளக்கினாா்.

குமராட்சி வேளாண்மை அலுவலா் நடராஜன், உதவி வேளாண்மை அலுவலா்கள் பிரவின், திவாகா் மற்றும் விவசாயிகள் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.