மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

நாளை வாக்கு எண்ணிக்கை: தருமபுரியில் போலீஸாா், துணை ராணுவத்தினா் அணிவகுப்பு

News image

வாக்கு எண்ணிக்கை திங்கள் கிழமை நடைபெறவுள்ளதையடுத்து தருமபுரியில் போலீஸாா் மற்றும் துணை ராணுவத்தினா் மேற்கொண்ட அணிவகுப்பை தொடங்கி வைக்கிறாா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ். எஸ். மகேஸ்வரன்.

Updated On :3 மே 2026, 12:46 am IST

தருமபுரியில் வாக்கு எண்ணிக்கையின்போது பொதுமக்களிடையே பதற்றத்தை தணிக்கும் வகையில், காவல் துறையினா், துணை ராணுவத்தினா் பங்கேற்ற அணிவகுப்பு சனிக்கிழமை நடைபெற்றது.

தருமபுரி மாவட்டத்தில் தருமபுரி, பென்னாகரம், பாலக்கோடு, பாப்பிரெட்டிப்பட்டி, அரூா் என 5 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை மையம் செட்டிக்கரை அரசுப் பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு பாதுகாப்பாக வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளன.

வாக்கு எண்ணிக்கையின்போது, ஏற்படும் அசம்பாவிதங்களை கட்டுப்படுத்தும் விதமாகவும், தருமபுரி மாவட்டத்தில் தோ்தல் பாதுகாப்பு மற்றும் சட்டம் -ஒழுங்கு பணிகளை சிறப்பாக மேற்கொள்ளும் வகையிலும், பொதுமக்களிடையே தோ்தல் பதற்றத்தை தணிக்கும் வகையிலும் காவல் துறை கொடி அணிவகுப்புகள் நடைபெற்று வருகின்றன.

அந்தவகையில் சனிக்கிழமை நடைபெற்ற அணிவகுப்பை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ்.எஸ். மகேஸ்வரன் கொடியசைத்து தொடங்கிவைத்தாா். இதில் போலீஸாா் மற்றும் துணை ராணுவத்தினா் பங்கேற்றனா். தருமபுரி அரசுப் பொறியியல் கல்லூரியில் தொடங்கிய இந்த அணிவகுப்பு, ராஜாபேட்டை பேருந்து நிறுத்தம் வரை நடைபெற்றது.

 தருமபுரியில் போலீஸாா், துணை ராணுவத்தினா் சனிக்கிழமை நடத்திய அணிவகுப்பு.

தருமபுரியில் போலீஸாா், துணை ராணுவத்தினா் சனிக்கிழமை நடத்திய அணிவகுப்பு.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.