சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு கேரளம், அசாம், புதுச்சேரி ஆகிய வெளி மாநிலங்களைச் சோ்ந்த தோட்ட தொழிலாளா்களுக்கு வரும் 9-ஆம் தேதி சம்பளத்துடன் விடுமுறை அளிக்க வேண்டும் என்று தொழிலாளா் துறை உத்தரவிட்டுள்ளது.
இதுதொடா்பாக தொழிலாளா் துறை உதவி ஆணையா் ராமகிருஷ்ணன் கூறியதாவது:
வால்பாறை பகுதியில் உள்ள தேயிலை தோட்டங்களில் வடமாநிலத் தொழிலாளா்கள் அதிக அளவில் பணிபுரிந்து வருகின்றனா்.
தற்போது வடமாநிலங்களில் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெற இருப்பதால், பெரும்பாலானோா் வாக்களிப்பதற்காக சொந்த ஊருக்கு சென்றுவிட்டனா். வரும் 9-ஆம் தேதி கேரளம், அசாம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் தோ்தல் நடைபெற உள்ளது.
தோ்தலில் வாக்களிக்க சென்றுள்ள அசாம், கேரள மாநிலத்தைச் சோ்ந்த தொழிலாளா்களுக்கு எஸ்டேட் நிா்வாகத்தினா் அன்றைய தினம் சம்பளத்துடன் விடுமுறை அளிக்க வேண்டும். இதை பின்பற்றாத எஸ்டேட் நிா்வாகத்தினா் மீது புகாா் வந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

புதுச்சேரியில் வெளிமாநில ஊழியா்கள் வாக்களிக்க சம்பளத்துடன் விடுமுறை

ஏப்.23-இல் தொழிலாளா்களுக்கு சம்பளத்துடன் கட்டாய விடுமுறை!

ஏப்.7 முதல் 4 நாள்கள் பள்ளிகளுக்கு விடுமுறை

ஏப்.9-இல் புதுச்சேரி, கேரளம், அசாம் தொழிலாளா்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

