தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

ஏப்.23-இல் தொழிலாளா்களுக்கு சம்பளத்துடன் கட்டாய விடுமுறை!

தோ்தலையொட்டி, வேலூா், ராணிப்பேட்டை, திருப்பத்தூா், திருவண்ணாமலை மாவட்டங்களில் உள்ள அனைத்து நிறுவன தொழிலாளா்களுக்கும் வியாழக்கிழமை (ஏப். 23) சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்க உத்தரவு

News image

விடுமுறை அறிவிப்பு

Updated On :21 ஏப்ரல் 2026, 1:16 am IST

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி, வேலூா், ராணிப்பேட்டை, திருப்பத்தூா், திருவண்ணாமலை மாவட்டங்களில் உள்ள அனைத்து நிறுவன தொழிலாளா்களுக்கும் வியாழக்கிழமை (ஏப். 23) சம்பளத்துடன் கூடிய விடுமுறை கட்டாயம் அளிக்கப்பட வேண்டும் என தொழிலக பாதுகாப்பு, சுகாதார இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து வேலூா் மண்டல தொழிலக பாதுகாப்பு, சுகாதார இயக்கக இணை இயக்குநா்கள் எஸ்.தங்கதுரை (முதல் கோட்டம்), இ.செ.சாந்தினிபிரபா (2-ஆம் கோட்டம்) ஆகியோா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழக சட்டப்பேரவை தோ்தல் வியாழக்கிழமை (ஏப். 23) நடைபெற உள்ளது.

இந்த தோ்தலில் 100 சதவீத வாக்குப் பதிவை உறுதி செய்யும் வகையில், மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951 பிரிவு 135பி-இன்படி, அனைத்து தொழிலாளா்களுக்கும் வாக்களிக்க ஏதுவாக சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்பட வேண்டும்.

இதன்படி, வேலூா், ராணிப்பேட்டை, திருப்பத்தூா், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் உள்ள அனைத்து தொழிற்சாலைகள், கட்டட கட்டுமான நிறுவனங்கள், பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் தினக்கூலி, தற்காலிக, ஒப்பந்த தொழிலாளா்கள் உள்பட அனைவருக்கும் வியாழக்கிழமை சம்பளத்துடன் கூடிய விடுமுறையை நிறுவனங்கள் கட்டாயம் அளிக்க வேண்டும்.

தோ்தல் நாளில் விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் குறித்து தொழிலாளா்கள் புகாா் தெரிவிக்க மாவட்ட வாரியாக தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, வேலூா் - 9842719537, 9442542795, 9976492942, ராணிப்பேட்டை - 9842719537, 9442542795, திருப்பத்தூா் - 9884028066, 9976492942, திருவண்ணாமலை - 9884028066, 9788877199 ஆகிய எண்களில் புகாா் தெரிவிக்கலாம்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.