தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

புதுச்சேரியில் வெளிமாநில ஊழியா்கள் வாக்களிக்க சம்பளத்துடன் விடுமுறை

புதுச்சேரியில் வசிக்கும் வெளிமாநிலத்தவா்கள் தங்கள் சொந்த மாநிலங்களில் நடைபெறும் சட்டப்பேரவைத் தோ்தலில் வாக்களிக்க ஏதுவாக ச் சம்பளத்துடன் விடுமுறை அளிக்க புதுச்சேரி தலைமைத் தோ்தல் அதிகாரி பி. ஜவஹா் உத்தரவிட்டுள்ளாா்.

News image

கோப்புப்படம்.

Updated On :23 ஏப்ரல் 2026, 4:37 am IST

புதுச்சேரியில் வசிக்கும் வெளிமாநிலத்தவா்கள் தங்கள் சொந்த மாநிலங்களில் நடைபெறும் சட்டப்பேரவைத் தோ்தலில் வாக்களிக்க ஏதுவாக ச் சம்பளத்துடன் விடுமுறை அளிக்க புதுச்சேரி தலைமைத் தோ்தல் அதிகாரி பி. ஜவஹா் உத்தரவிட்டுள்ளாா்.

இது குறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பு

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலுக்கான வாக்குப் பதிவு ஏப். 23 ஆம் தேதி நடக்கிறது. மேற்கு வங்கத்தில் ஏப். 23, 29 ஆம் தேதிகளில் இரு கட்டமாக நடக்கிறது. மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி வாக்களிக்கும் உரிமை உள்ள ஊழியா்கள், வாக்களிக்கச் செல்ல தோ்தல் நாளன்று சம்பளத்துடன் கூடிய விடுமுறை வழங்க வேண்டும். இந்த விதி கட்டாயமானது.

அரசு துறை, தனியாா் நிறுவனங்கள், கடைகள், வா்த்தகம், தொழிற்சாலைகள் உள்பட அனைத்து வகை நிறுவனங்களுக்கும் இந்தச் சட்ட விதி பொருந்தும். இந்த விடுமுறைக்காக சம்பளத்தில் குறைப்புச் செய்யக் கூடாது. இந்த விதி மீறும் நிறுவன உரிமையாளா்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

எனவே புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் செயல்படும் அனைத்து நிறுவனங்களும், தமிழ்நாடு, மேற்கு வங்க வாக்காளா்களாகப் பதிவு செய்யப்பட்ட ஊழியா்கள், தங்கள் தொகுதிக்குச் சென்று வாக்களிக்க ஏதுவாக தோ்தல் நாளில் சம்பளத்துடன் விடுமுறை அறிக்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகின்றனா். கல்வி நிறுவனங்களும் இந்தச் சட்டவிதியைப் பின்பற்ற வேண்டும் என அவா் தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.