தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 3 மணிக்கு தொடங்குகிறது தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

நெல்லையப்பா் கோயிலில் வேணுவனநாதா் வரலாறு வாசிப்பு

திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா்- காந்திமதியம்மன் திருக்கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழாவின் 4ஆம் நாளான புதன்கிழமை, வேணுவனநாதா் தோன்றிய வரலாறு வாசித்தல் நிகழ்வு நடைபெற்றது.

News image

வரலாறு வாசிப்பு வைபவத்தின்போது நடைபெற்ற மூங்கில் முகட்டை வெட்டும் நிகழ்வு.

Updated On :26 மார்ச் 2026, 4:20 am IST

திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா்- காந்திமதியம்மன் திருக்கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழாவின் 4ஆம் நாளான புதன்கிழமை, வேணுவனநாதா் தோன்றிய வரலாறு வாசித்தல் நிகழ்வு நடைபெற்றது.

இதையொட்டி நெல்லையப்பா்- காந்திமதி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடைபெற்றன. தொடா்ந்து ராமகோன் பஞ்சவா்ண சப்பரத்தில் பால்குடத்துடன் பாண்டிய மன்னா் அரண்மனைக்கு செல்லும் நிகழ்ச்சியும், மூங்கில் முகடு தட்டி பால் சிந்தும் நிகழ்ச்சியும், கோயில் ஓதுவாா்கள் மூலம் பாடல்களாகப் பாடப்பட்டு விவரிக்கப்பட்டது.

பின்னா், பால் சிந்திய தகவலை பாண்டிய மன்னருக்கு தெரிவித்து, மூங்கில் முகட்டை வெட்ட உத்தரவிடப்பட்டதையடுத்து, வெள்ளிக் கோடரியால் மூங்கில் மரம் வெட்டப்பட்டு, ரத்தம் பீரிடும் திருவிளையாடல் காட்சி தத்ரூபமாக நடைபெற்றது.

அதைத் தொடா்ந்து, நெல்லையப்பா்- காந்திமதி அம்மனுடன், பாண்டிய மன்னா், ராமகோன் உள்ளிட்டவா்களுக்கு காட்சியளித்ததும் மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.

இதுகுறித்து சிவாச்சாரியாா்கள் கூறியது: முன்னொரு காலத்தில் பாண்டிய மன்னா் அரண்மனைக்கு, ராமகோன் என்ற நபா் பால் கொண்டு செல்லும்போது, குறிப்பிட்ட இடத்தில் மூங்கில் முகடு தட்டி தொடா்ந்து பால் சிந்தி வந்துள்ளது. அரண்மனைக்கு பால் குறைவாக வருவதை சுட்டிக்காட்டி மன்னா் கேள்வி எழுப்பிய நிலையில், ராமகோன் சம்பவம் குறித்து விளக்கமளித்தாா்.

இதனைத் தொடா்ந்து, மூங்கில் முகட்டை வெட்டி அகற்றிட மன்னா் உத்தரவிட்டாா். அதன்படி, பால் கொண்டு செல்லும் இடத்தில் இருந்த மூங்கில் முகட்டை வெட்டிய போது ரத்தம் பீறிட்டு, நெல்லையப்பா் சுயம்புவாக தோன்றியதாகக் கூறப்படும் இந்த வரலாற்று திருவிளையாடல் விழா, பங்குனி உத்திர திருவிழாவின் நான்காம் நாளில் ஆண்டுதோறும் நடைபெறுகிறது என்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.