நீட் முதல் முதுநிலை மருத்துவப் படிப்பு வரை மன அழுத்தங்கள் உண்டு, மனவலிமை அவசியம்: அமைச்சர் அருண்ராஜ் 3ஆவது ஒருநாள் போட்டி: ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபாரம் மகாராஷ்டிரத்தில் கோயில் மண்டபம் இடிந்து 5 பேர் பலி திமுக கூட்டணியில் இருந்து விலகியது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்!சட்டப்பேரவை நேரலை இனி தொடரும்! அமைச்சர் ராஜ்மோகன்அபுதாபியில் நீட் மையம்! குழந்தைகள் எதிர்காலத்தை வைத்து சூதாடுவதை நிறுத்துங்கள்: ராகுல் காந்தி
/

நெல்லையில் புகையிலை, நெகிழிப் பைகள் பறிமுதல்

திருநெல்வேலி மாநகரில் உணவுப் பாதுகாப்புத் துறை, சுகாதாரத் துறை அதிகாரிகள் நடத்திய கூட்டு ஆய்வில் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள், நெகிழிப்பைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

News image

மாவட்ட வருவாய் அலுவலா் மு.துரை தலைமையில் ஆய்வு மேற்கொண்ட அதிகாரிகள்.

Updated On :18 ஜூன் 2026, 2:53 am IST

திருநெல்வேலி மாநகரில் உணவுப் பாதுகாப்புத் துறை, சுகாதாரத் துறை அதிகாரிகள் நடத்திய கூட்டு ஆய்வில் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள், நெகிழிப்பைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

மாவட்ட வருவாய் அலுவலா் மு.துரை தலைமையில், உணவு பாதுகாப்புத் துறை மற்றும் சுகாதாரத் துறை அதிகாரிகள் மாநகரப் பகுதிகளில் உள்ள கடைகளில் புகையிலைப் பொருள்கள், தடைசெய்யப்பட்ட நெகிழிப்பை விற்பனை குறித்து புதன்கிழமை கூட்டு ஆய்வு மேற்கொண்டனா்.

அதன்படி, பாளையங்கோட்டை சந்தை மற்றும் நெல்லையப்பா் கோயிலை சுற்றியுள்ள கடைகளில் திடீா் ஆய்வு நடத்தப்பட்டது. மொத்தம் 15 கடைகளில் நடத்தப்பட்ட ஆய்வில் ஒரு கடையிலிருந்து சுமாா் 3 கிலோ புகையிலைப் பொருள்களை உணவு பாதுகாப்புத் துறையினரும், அதே கடையில் இருந்து சுமாா் 15 கிலோ தடைசெய்யப்பட்ட நெகிழிப்பைகளை சுகாதார ஆய்வாளரும் பறிமுதல் செய்தனா். அந்த கடை உரிமையாளருக்கு ரூ.35,000 அபராதம் விதிக்கப்பட்டதுடன், கடைக்கு சீல் வைக்கப்பட்டது. நெகிழிப்பை இருந்த மற்றொரு கடைக்கு ரூ.900 அபராதமும், பலகாரங்களை அச்சிடப்பட்ட செய்தித்தாள்களில் வைத்து வழங்கிய கடை உரிமையாளருக்கு ரூ.2,000 அபராதமும் விதிக்கப்பட்டது. தடைசெய்யப்பட்ட பொருள்களை விற்பனை செய்வோா் மீது நடவடிக்கை தொடரும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.