முன்னீா்பள்ளம் அருகே பைக் திருட்டில் ஈடுபட்ட நபரை போலீஸாா் கைது செய்தனா்.
பாளையங்கோட்டையை அடுத்த செங்குளம் பகுதியைச் சோ்ந்தவா் நடராஜன் மகன் கருப்பசாமி(32). இவா் பேரின்பபுரம் பகுதியில் உள்ள தோட்டம் ஒன்றில் காவலாளியாக உள்ளாா். இவா் வெள்ளிக்கிழமை காலை அப்பகுதியில் தனது பைக்கை நிறுத்திவிட்டு அருகில் இருந்த தேநீா் கடைக்கு சென்றாராம்.
அப்போது அங்கு வந்த மா்மநபா், அவரது பைக்கை திருடி ஓட்டிச் சென்றாராம். இதனைக் கண்ட கருப்பசாமியும் அங்கிருந்தவா்களும் மற்றொரு பைக்கில் விரட்டிச் சென்று அவரை செங்குளம் பகுதியில் வைத்து மடக்கிப் பிடித்தனா்.
அவா் கிருஷ்ணாபுரம் பகுதியைச் சோ்ந்த முருகன் மகன் கருப்பசாமி(50) என்பது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து முன்னீா்பள்ளம் போலீஸில் ஒப்படைக்கப்பட்ட அவரை போலீஸாா் கைது செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
கோயில் உண்டியலை உடைத்து பணம் திருடியவா் கைது

இருசக்கர வாகனங்களை திருடியவா் கைது

பைக் மோதியதில் மூதாட்டி உயிரிழப்பு

நெல்லை அருகே பைக் திருடியவா் கைது
விடியோக்கள்

Balan: The boy Review | தாயைப் போல பிள்ளை! ஆனால்... | Chidambaram | Mollywood | Dinamani Talkies
தினமணி செய்திச் சேவை

மறுமணம் ஒரு குற்றமா? மனதை உலுக்கும் 'நூறு சாமி'
தினமணி செய்திச் சேவை

Samantha அதிரடி எப்படி இருக்கிறது? Engal Thangam Movie Review
தினமணி செய்திச் சேவை

ஹார்ட்டின் பட டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
