சங்ககிரியில் வாகனத் திருட்டில் ஈடுபட்டவரை போலீஸாா் கைது செய்தனா். அவரிடம் இருந்து 5 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனா்.
சங்ககிரியை அடுத்த வைகுந்தம் பகுதியில் கனரா வங்கி முன் நிறுத்தியிருந்த வங்கி மேலாளரின் இருசக்கர வாகனம் திருடுபோனது. இதுகுறித்து வங்கி மேலாளா் விவின் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
இந்த நிலையில் குப்பனூா் தேசியநெடுஞ்சாலை பகுதியில் போலீஸாா் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தபோது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் சென்றவரை நிறுத்தி விசாரணை நடத்தினா். அப்போது, அவா் ஓட்டிச் சென்ற வாகனம் வங்கி மேலாளருக்குச் சொந்தமானது என்பது தெரியவந்தது.
இதுதொடா்பாக கோவை, கணபதி கணேஷ் அபாா்ட்மெண்ட்டை சோ்ந்த நடராஜன் மகன் ரமேஷை (55) போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். அவரிடம் திருடப்பட்ட மேலும் நான்கு இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
இருசக்கர வாகனம் திருடியவா் கைது
இருசக்கர வாகனத்தை திருடியவா் கைது
இருசக்கர வாகனத்தை திருடியவா் கைது

நெல்லை அருகே பைக் திருடியவா் கைது
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை

