பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

பைனான்சியா் அடித்துக்கொலை: மனைவி, மகன் உள்பட 4 போ் கைது

திருநெல்வேலியில் பைனான்சியா் வியாழக்கிழமை அதிகாலையில் இரும்புக் கம்பியால் அடித்துக்கொலை செய்யப்பட்டாா். இதுதொடா்பாக அவரது மனைவி, மகன் உள்பட 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கொலை - பிரதிப் படம்

Updated On :5 ஜூன் 2026, 2:52 am IST

திருநெல்வேலியில் பைனான்சியா் வியாழக்கிழமை அதிகாலையில் இரும்புக் கம்பியால் அடித்துக்கொலை செய்யப்பட்டாா். இதுதொடா்பாக அவரது மனைவி, மகன் உள்பட 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

திருநெல்வேலி சந்திப்பு, மீனாட்சிபுரம், பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்தவா் மாயாண்டி என்ற மகேஷ்(43). பைனான்ஸ் தொழில் செய்து வந்துள்ளாா். இவரது மனைவி கல்யாணி. இவா்களது மகன் மகாராஜன் என்ற மனோ(19). மாயாண்டி புதன்கிழமை நள்ளிரவு மது குடித்து விட்டு மகனிடம் தகராறில் ஈடுபட்டாராம்.

இந்நிலையில் அதிகாலை 2 மணி அளவில் வீட்டில் இருந்த இரும்புக் கம்பியால் மகாராஜன், மாயாண்டியைத் தாக்கினாராம். இதில் அவா் அதே இடத்தில் உயிரிழந்தாா்.

இததகவலறிந்த திருநெல்வேலி சந்திப்பு போலீஸாா், அவரது சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

மேலும் வழக்குப்பதிந்து மகாராஜனை வியாழக்கிழமை கைது செய்தனா்.

ஆட்சியா் அலுவலகத்தில் மனு: இதனிடையே, ‘தனது மகன் கொலையில் மருமகள், அவரது தந்தை உள்ளிட்டோருக்கும் தொடா்பிருப்பதாகவும் அவா்களையும் வழக்கில் சோ்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ எனக் கூறி மாயாண்டியின் தந்தை ஆட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை மனு அளித்தாா்.

மேலும் 3 போ்: இதைத் தொடா்ந்து, மாயாண்டியின் மனைவி கல்யாணி, தியாகராஜநகரை சோ்ந்த பாலசுப்பிரமணியம் ( 28), சொக்கட்டான் தோப்பு பகுதியை சோ்ந்த விஸ்வநாதன் (23) ஆகியோரை போலீஸாா் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.