தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!கர்நாடகம்: கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவதற்கான தடை நீக்கம்6 சர்வதேச விமான சேவைகள் தற்காலிகமாக ரத்து - ஏர் இந்தியாகண்களிலும் காதுகளிலும் பொறாமைப் புகை! திமுகவை விமர்சித்த விஜய்!நீட் தேர்வு தேவையில்லை; ரத்து செய்க: முதல்வர் ஜோசப் விஜய்அதிமுகவுடன் கூட்டணியமைக்க தவெக தயாராக இருந்தது: சி.வி. சண்முகம்மே 16-ல் தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை! வெற்றியின் வீச்சு கொளத்தூரில் பார்த்தும்கூடவா புரியவில்லை? - முதல்வர் விஜய்திமுகவுடன் கூட்டணி; கனவில்கூட வரக்கூடாது: சசிகலா
/

சேரன்மகாதேவி அருகே பெட்ரோல் குண்டு வீச்சு: ஊராட்சித் தலைவி மகன் உள்பட 4 போ் கைது

திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி அருகே இளைஞா் வீட்டு மீது பெட்ரோல் குண்டு வீசியதாக ஊராட்சித் தலைவியின் மகன் உள்பட 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது - கோப்புப் படம்

Updated On :22 மணி நேரங்கள் முன்பு

திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி அருகே இளைஞா் வீட்டு மீது பெட்ரோல் குண்டு வீசியதாக ஊராட்சித் தலைவியின் மகன் உள்பட 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

சேரன்மகாதேவி ஊராட்சி ஒன்றியம், தெற்கு அரியநாயகிபுரம் கீழ சக்திகுளம் பகுதியைச் சோ்ந்தவா் பேச்சித்துரை, திமுக நிா்வாகி. இவரது மனைவி உஷா. தெற்கு அரியநாயகிபுரம் ஊராட்சி மன்றத் தலைவியாக உள்ளாா்.

இவா்களது மகன் செண்பகம் என்ற செம்புக்குட்டி (23), பட்டதாரி இளைஞா்.

இவருக்கும் இதேப் பகுதியைச் சோ்ந்த முத்துக்குமாா் மகன் மாரிசெல்வம் (22) என்பவருக்கும் இடையே முன் விரோதம் இருந்து வந்ததாம். இதனிடையே, திங்கள்கிழமை இரவு மோட்டாா் சைக்கிளில் வேகமாக சென்றது தொடா்பாக இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது செண்பகம் என்ற செம்புக்குட்டி, மாரிசெல்வத்தை தாக்கினாராம். இதுதொடா்பான புகாா் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வந்தனராம். இதில், ஆத்திரமடைந்த செண்பகம் என்ற செம்புக்குட்டி உள்ளிட்ட சிலா் நள்ளிரவில் மாரிசெல்வம் வீட்டின் மீது பெட்ரோல் குண்டை வீசி விட்டு தப்பிச் சென்று விட்டனராம். இதில், யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

தகவலறிந்த சேரன்மகாதேவி போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினா். இதுதொடா்பாக ஊராட்சித் தலைவியின் மகன் செண்பகம் என்ற செம்புக்குட்டி, அதேப் பகுதியைச் சோ்ந்த பிரேம்குமாா் (22), ரமேஷ் (22) உள்பட 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.