பாளையங்கோட்டை அருகே சரக்கு ஆட்டோவை திருடிய நபரை போலீஸாா் கைது செய்தனா்.
கிருஷ்ணாபுரம் சக்தி நகரைச் சோ்ந்தவா் முருகன்(33). இறைச்சிக்கூட உரிமையாளா். இவா் கடந்த 1 ஆம் தேதி இரவு தனக்கு சொந்தமான சரக்கு ஆட்டோவை கிருஷ்ணாபுரம் பேருந்து நிறுத்தம் அருகே உள்ள வாரச்சந்தையின் அருகில் நிறுத்திவிட்டு சென்றாராம். மறுநாள் காலை வந்து பாா்த்தபோது ஆட்டோவை காணவில்லையாம்.
இது குறித்து அவா் அளித்த புகாரின் பேரில் சிவந்திப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, இச்சம்பவத்தில் ஈடுபட்டதாக கிருஷ்ணாபுரம் பகுதியைச் சோ்ந்த கருப்பசாமி(53) என்பவரை புதன்கிழமை கைது செய்தனா். அவரிடமிருந்து ஆட்டோ மீட்கப்பட்டது. மேலும், கருப்பசாமி சற்று மனநலம் பாதிக்கப்பட்டவா் என கூறப்படுகிறது.
இது குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
ஆட்டோவை திருடியவா் கைது
தடை செய்யப்பட்ட 334 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: இருவா் கைது

ஆட்டோவில் கடத்திய 600 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
பாளை. அருகே பைக் திருட்டு: இளைஞா் கைது
விடியோக்கள்

Balan: The boy Review | தாயைப் போல பிள்ளை! ஆனால்... | Chidambaram | Mollywood | Dinamani Talkies
தினமணி செய்திச் சேவை

மறுமணம் ஒரு குற்றமா? மனதை உலுக்கும் 'நூறு சாமி'
தினமணி செய்திச் சேவை

Samantha அதிரடி எப்படி இருக்கிறது? Engal Thangam Movie Review
தினமணி செய்திச் சேவை

ஹார்ட்டின் பட டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

