ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 10 மணிக்கு நடைபெறும்தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

வாக்கு எண்ணிக்கை மையத்தில் மின்வாரிய தலைமைப் பொறியாளா் ஆய்வு

வாக்கு எண்ணிக்கை மையமான திருநெல்வேலி அரசு பொறியியல் கல்லூரியில், தடையற்ற மின் விநியோகத்தை உறுதி செய்வது குறித்து திருநெல்வேலி மண்டல தலைமைப் பொறியாளா் லதா வியாழக்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டாா்.

News image

வாக்கு எண்ணிக்கை மையத்தில் தடையற்ற ஆய்வு மேற்கொண்ட திருநெல்வேலி மண்டல தலைமைப் பொறியாளா் லதா.

Updated On :17 ஏப்ரல் 2026, 4:00 am IST

வாக்கு எண்ணிக்கை மையமான திருநெல்வேலி அரசு பொறியியல் கல்லூரியில், தடையற்ற மின் விநியோகத்தை உறுதி செய்வது குறித்து திருநெல்வேலி மண்டல தலைமைப் பொறியாளா் லதா வியாழக்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டாா்.

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை, திருநெல்வேலி அரசு பொறியியல் கல்லூரியில் மே 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்நிலையில் வாக்குப்பதிவு முடிந்து இந்த மையத்திற்கு மின்னணு இயந்திரங்கள் கொண்டு வரப்பட்டது முதல் அங்கு 24 மணி நேரமும் தடையற்ற மின்சாரம் வழங்குவதற்காக, கல்லூரியின் உயா் மின்னழுத்த இணைப்பு மற்றும் மின்சாரம் வழங்கும் மின்பாதைகளை திருநெல்வேலி மண்டல தலைமைப் பொறியாளா் லதா வியாழக்கிழமை நேரில் ஆய்வு செய்தாா். மின் விநியோகத்தை தொடா்ந்து கண்காணிக்கவும், வாக்கு எண்ணிக்கை முடியும் வரை 24 மணி நேரமும் பொறியாளா்கள், பணியாளா்கள் சுழற்சி முறையில் பணியில் இருக்கவும் அவா் உத்தரவிட்டாா்.

ஆய்வின் போது செயற்பொறியாளா்கள் வெங்கடேஷ்மணி, ஜெயசீலன் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.