தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!ஆளுநரை விஜய் சந்திக்க மாலை 6.30 மணிக்கு நேரம் ஒதுக்கப்பட்டிருப்பதாக ஆளுநர் மாளிகை தகவல்தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

வாக்கு எண்ணிக்கை மையத்தில் முன்னேற்பாட்டுப் பணிகள்: ஆட்சியா் துா்காமூா்த்தி ஆய்வு

News image

வாக்கு எண்ணிக்கை மையம். - கோப்புப் படம்

Updated On :21 ஏப்ரல் 2026, 12:20 am IST

திருச்செங்கோடு தனியாா் கல்லூரி வாக்கு எண்ணிக்கை மையத்தில் நடைபெறும் முன்னேற்பாட்டுப் பணிகளை மாவட்ட தோ்தல் அலுவலரும் ஆட்சியருமான துா்காமூா்த்தி திங்கள்கிழமை ஆய்வு செய்தாா்.

தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் வியாழக்கிழமை (ஏப்.23) காலை 7 முதல் மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. நாமக்கல் மாவட்டத்தில் 1,781 வாக்குச்சாவடிகளில் தோ்தலுக்கான முன்னேற்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தோ்தல் முடிந்ததும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக திருச்செங்கோடு விவேகானந்தா மகளிா் பொறியியல் கல்லூரிக்கு கொண்டு செல்லப்படுகின்றன.

வாக்கு எண்ணிக்கை மே 4-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், அங்கு மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாட்டுப் பணிகள் குறித்து துறை சாா்ந்த அலுவலா்களுடன் ஆட்சியா் துா்காமூா்த்தி திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

ராசிபுரம், சேந்தமங்கலம், நாமக்கல், பரமத்தி வேலூா், திருச்செங்கோடு, குமாரபாளையம் ஆகிய 6 தொகுதிகளுக்கான வாக்குப் பதிவு இயந்திரங்கள் தனித்தனியாக வைக்கப்பட்டு வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

தபால் வாக்குகள் தனியாக ஒரு அறையில் பாதுகாப்புடன் வைக்கப்படுகின்றன. இந்திய தோ்தல் ஆணைய அறிவுறுத்தலின்படி, வாக்கு எண்ணிக்கை நடைபெறும் வளாகத்தைச் சுற்றியுள்ள 100 மீட்டா் வெளிவட்டப் பகுதியிலிருந்து வாயில்வரை உள்ளூா் காவல் துறையினா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவா். வாக்கு எண்ணிக்கை வளாகத்தின் பிரதான வாயிலில் ஆயுதம் ஏந்திய காவலா்கள் பணியில் இருப்பா்.

இவா்கள் தவிர மத்திய எல்லை பாதுகாப்புப் படை வீரா்களும் பணியில் ஈடுபட்டிருப்பா். மூன்று அடுக்கு பாதுகாப்பு வளையம் அமைக்கப்பட்டுள்ளன. கண்காணிப்பு கேமரா, இணைய வசதி மற்றும் பிற ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுவதை துறை சாா்ந்த அலுவலா்களுடன் சென்று ஆட்சியா் பாா்வையிட்டாா். இந்த ஆய்வின்போது, துணை மாவட்ட தோ்தல் அலுவலா் ம.கண்ணன், அனைத்து தோ்தல் நடத்தும் அலுவலா்கள் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.