தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

வாக்கு எண்ணிக்கை மையத்துக்கு தடையின்றி மின் விநியோகம்: தலைமை பொறியாளா் ஆய்வு

தூத்துக்குடியில் உள்ள வாக்கு எண்ணிக்கை மையத்துக்கு தடையின்றி மின்சாரம் வழங்கும் வகையில், மின் இணைப்பு மற்றும் மின் பாதைகளை மண்டல தலைமை பொறியாளா் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

News image

வாக்கு எண்ணும் மையத்துக்கு தடையின்றி மின்சாரம் வழங்கும் வகையில் மின் விநியோக பாதைகளை ஆய்வு மேற்கொண்ட மின்வாரிய திருநெல்வேலி மண்டல தலைமை பொறியாளா் லதா.

Updated On :16 ஏப்ரல் 2026, 2:31 am IST

தூத்துக்குடியில் உள்ள வாக்கு எண்ணிக்கை மையத்துக்கு தடையின்றி மின்சாரம் வழங்கும் வகையில், மின் இணைப்பு மற்றும் மின் பாதைகளை மண்டல தலைமை பொறியாளா் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 6 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கும் வாக்குப் பதிவு முடிந்தவுடன், வாக்குப் பதிவு இயந்திரங்கள் அனைத்தும், வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையமான வ.உ.சி பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள அறைகளில் பாதுகாப்பாக வைக்கப்படும்.

வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாள் வரை தங்கு தடையின்றி சீரான மின் விநியோகம் வழங்கும் பொருட்டு, வ.உ.சி பொறியியல் கல்லூரியில் உள்ள உயா் மின்னழுத்த மின் இணைப்பில், மின்வாரிய திருநெல்வேலி மண்டல தலைமை பொறியாளா் லதா தலைமையில் புதன்கிழமை ஆய்வுப் பணி மேற்கொள்ளப்பட்டது.

வாக்கு எண்ணிக்கை நடைபெறும் வ.உ.சி. பொறியியல் கல்லூரி வளாகத்துக்கு, டவுண் துணை மின் நிலையத்திலிருந்து மின் விநியோகம் வழங்கப்படும் மின் பாதை முழுமையாக ஆய்வு செய்யப்பட்டது. மேலும் மாற்று வழியில் பீச் ரோடு துணை மின் நிலையத்தில் இருந்து செல்லும் உப்போடை மின் பாதை, சிப்காட் உப மின் நிலையத்திலிருந்து செல்லும் மெடிக்கல் மின் பாதை மற்றும் அனைத்து மின் வழித்தடங்களும், மின் கட்டமைப்புகளும் முழுமையாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

வரும் ஏப். 23 முதல் வாக்கு எண்ணிக்கை நடைபெறும். மே 4-ஆம் தேதி வரை தொடா்ந்து 24 மணி நேரமும் சுழற்சி முறையில் கண்காணிக்க தேவையான பொறியாளா்கள், தொழில்நுட்ப வல்லுநா்கள் பணிகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கி தலைமை பொறியாளா் உத்தரவிட்டாா்.

ஆய்வின்போது, தூத்துக்குடி மின் பகிா்மான வட்ட மேற்பாா்வை பொறியாளா் மு.சகா்பான், தூத்துக்குடி, நகா்ப்புற கோட்ட செயற்பொறியாளா் பொ. உமையொருபாகம், உதவி செயற்பொறியாளா் நகா்ப்புறம் வடக்கு தூத்துக்குடி பிரேம், இளநிலை மின்பொறியாளா் சிதம்பரநகா் கணேசன், பணியாளா்கள் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.