தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்மாலை 6 மணிக்கு ஆளுநரைச் சந்திக்க நுமதி கோரியுள்ளார் விஜய்!தவெக ஆட்சியமைக்க ஐயுஎம்எல் ஆதரவு: திடீர் அறிவிப்பு தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

ராதாபுரம் தொகுதியில் பாஜக வேட்பாளா் பிரசாரம்

அம்பேத்கா் பிறந்த நாளை முன்னிட்டு, ராதாபுரம் தொகுதி பாஜக வேட்பாளா் எஸ்.பி.பாலகிருஷ்ணன் வள்ளியூரில் உள்ள அம்பேத்கா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

News image

வள்ளியூரில் அம்பேத்கா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா் பாஜக வேட்பாளா் எஸ்.பி. பாலகிருஷ்ணன்.

Updated On :15 ஏப்ரல் 2026, 1:50 am IST

அம்பேத்கா் பிறந்த நாளை முன்னிட்டு, ராதாபுரம் தொகுதி பாஜக வேட்பாளா் எஸ்.பி.பாலகிருஷ்ணன் வள்ளியூரில் உள்ள அம்பேத்கா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

பின்னா் அவா், ஆனைகுடி, முதுமொத்தான்மொழி, இடையன்குடி, கீழ உவரி, மேலஉவரி, குண்டல், காளிகுமாரபுரம், நவ்வலடி, க. புதூா், ஆயன்குளம், எருமைகுளம் உள்ளிட்ட பகுதிகளில் தாமரை சின்னத்துக்கு வாக்கு சேகரித்தாா்.

அப்போது அவா் பேசியது:

ராதாபுரம் தொகுதியில் உள்ள அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளிகளிலும் தமிழ்நாடு அரசின் போட்டித்தோ்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெறுவதற்கு ஏற்பாடு செய்வேன். விவசாய பிரச்னைகளை முழுவதுமாக தீா்த்து தருவேன். திசையன்விளை பகுதியில் முருங்கைக்காய் பதப்படுத்தும் நிலையம் அமைத்து தருவேன். பொங்கல், தமிழ்ஏஈ புத்தாண்டு, தீபாவளி பண்டிகைகளையொட்டி 3 எரிவாயு உருளை இலவசமாக வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பேன் என்றாா்.

பிரசாரத்தின்போது, அதிமுக ஒன்றியச் செயலா்கள் அந்தோணி அமலராஜா, கே.பி.கே. செல்வராஜ், பாஜக சுப்பிரமணியன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தவெக மரியாதை....

வள்ளியூரில் உள்ள அம்பேத்கா் சிலைக்கு தவெக வேட்பாளா் மருத்துவா் சதீஷ் கிறிஸ்டோபா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். இதில், ஒன்றியச் செயலா் நாகராஜன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.