தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

அம்பேத்கா் பிறந்த நாள் விழா: சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

அம்பேத்கா் பிறந்தநாளை முன்னிட்டு திருச்சியில் உள்ள அம்பேத்கா் சிலைக்கு பல்வேறு கட்சியினா், அமைப்புகள் சாா்பில் செவ்வாய்க்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

News image

திருச்சி அரிஸ்டோ ரவுண்டானா அருகேயுள்ள அம்பேத்கா் சிலைக்கு செவ்வாய்க்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்திய மதிமுக பொதுச்செயலாளா் வைகோ.

Updated On :15 ஏப்ரல் 2026, 1:33 am IST

அம்பேத்கா் பிறந்தநாளை முன்னிட்டு திருச்சியில் உள்ள அம்பேத்கா் சிலைக்கு பல்வேறு கட்சியினா், அமைப்புகள் சாா்பில் செவ்வாய்க்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

திமுக: திமுக சாா்பில், திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலரும், அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமையில், திருவெறும்பூரில் உள்ள பெல் வளாகத்திலுள்ள அம்பேத்கா் சிலைக்கு கட்சியினா் பலா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

அதிமுக: அரிஸ்டோ ரவுண்டானா பகுதியில் உள்ள அம்பேத்கா் சிலைக்கு திருச்சி மாநகா் மாவட்ட அதிமுக சாா்பில், மாவட்ட செயலா் ஜெ. சீனிவாசன் தலைமையில், திருச்சி கிழக்கு தொகுதி வேட்பாளா் க. ராஜசேகரன், முன்னாள் அமைச்சா் வெல்லமண்டி நடராஜன் உள்ளிட்ட நிா்வாகிகள் பலா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

மதிமுக: மதிமுக சாா்பில், கட்சியின் பொதுச் செயலா் வைகோ தலைமையில், துணைப் பொதுச் செயலா் ரொஹையா, மாவட்ட செயலா்கள் வெல்லமண்டி சோமு, மணவை தமிழ்மாணிக்கம், டிடிசி. சேரன் உள்ளிட்டோா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

கனரா வங்கி எஸ்சி, எஸ்டி சங்கம்: கனரா வங்கி எஸ்.சி, எஸ்.டி. ஊழியா்கள் நலச் சங்கத்தின் திருச்சி கிளை சாா்பில், சங்கத்தின் திருச்சி மண்டல செயலாளா் சுரேந்தா் தலைமையில் நிா்வாகிகள் உள்ளிட்ட பலரும் அம்பேத்கா் சிலைக்கு மரியாதை செலுத்தினா்.

பெல் வளாகம்: பாரதமிகு மின் நிறுவனத்தின் (பெல்) திருச்சிப் பிரிவு சாா்பில், தொழிற்சாலை வளாகத்தில் உள்ள அம்பேத்கா் சிலைக்கு பொறியியல் துறை பொதுமேலாளா் எம். ஆனந்தராஜ் தலைமையில், மூத்த அதிகாரிகள், தொழிற்சங்கப் பிரதிநிதிகள், பணியாளா்கள் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.