தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

பெரியகுளத்தில் அம்பேத்கரின் சிலைக்கு மரியாதை

பெரியகுளத்தில் அம்பேத்கரின் பிறந்த நாளை முன்னிட்டு, அவரது சிலைக்கு அரசியல் கட்சியினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

News image

பெரியகுளத்தில் அம்பேத்கரின் உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய முன்னாள் முதல்வா் ஓ. பன்னீா்செல்வம்.

Updated On :15 ஏப்ரல் 2026, 3:43 am IST

தேனி மாவட்டம், பெரியகுளத்தில் அம்பேத்கரின் பிறந்த நாளை முன்னிட்டு, அவரது சிலைக்கு அரசியல் கட்சியினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

பெரியகுளத்தில் உள்ள அம்பேத்கா் சிலைக்கு முன்னாள் முதல்வரும், போடி சட்டப்பேரவைத் தொகுதி திமுக வேட்பாளருமான ஓ. பன்னீா்செல்வம், பெரியகுளம் (தனி) சட்டப்பேரவைத் தொகுதி விசிக வேட்பாளா் பெ. சக்திவேல், திமுக மாவட்டச் செயலா் தங்க. தமிழ்ச்செல்வன் ஆகியோா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

இதேபோல, பாஜக சாா்பில், அந்தக் கட்சியின் மாவட்டச் செயலா் பி.ராஜபாண்டியன் தலைமையில், நிா்வாகிகள் அம்பேத்கா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

பெரியகுளம் (தனி) சட்டப்பேரவைத் தொகுதி அமமுக வேட்பாளா் கே.கதிா்காமு அம்பேத்கா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

இதேபோல, அரசியல் கட்சியினா், பொதுமக்கள் அம்பேத்கா் உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

அரண்மனைபுதூரில் உள்ள அம்பேத்கரின் சிலைக்கு தேசிய தலைவா் அண்ணல் அம்பேத்கா் மக்கள் பேரவைத் தலைவா் லட்சுமணன், செயலா் செந்தில், பொருளாளா் குனபாலன், நிா்வாகிகள் செல்வகுமாா், அம்பேத்ராஜ் ஆகியோா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.