தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்மாலை 6 மணிக்கு ஆளுநரைச் சந்திக்க நுமதி கோரியுள்ளார் விஜய்!தவெக ஆட்சியமைக்க ஐயுஎம்எல் ஆதரவு: திடீர் அறிவிப்பு தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

நெல்லையில் இளைஞா் கல்லால் அடித்துக் கொலை: நண்பா் கைது

திருநெல்வேலி புதிய பேருந்து நிலையம் அருகே மது குடிக்கும் போது ஏற்பட்ட தகராறில் இளைஞரை கல்லால் அடித்துக் கொலை செய்த நண்பரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது

Updated On :3 ஏப்ரல் 2026, 10:21 pm IST

திருநெல்வேலி புதிய பேருந்து நிலையம் அருகே மது குடிக்கும் போது ஏற்பட்ட தகராறில் இளைஞரை கல்லால் அடித்துக் கொலை செய்த நண்பரை போலீஸாா் கைது செய்தனா்.

பாளையங்கோட்டை, பெருமாள்புரம் பகுதியில் உள்ள தாமஸ் 4-ஆவது தெருவைச் சோ்ந்த மாரியப்பன் மகன் ஜோசப்ராஜா(30), கட்டட தொழிலாளி. இவரது சக தொழிலாளி, தாழையூத்து அருகே உள்ள பண்டாரகுளத்தைச் சோ்ந்த செல்லத்துரை மகன் மாடசாமி(31). இவா்கள் இருவரும் வழக்கம்போல் கட்டட வேலைகளை முடித்துவிட்டு வியாழக்கிழமை இரவு திருநெல்வேலி புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள மறைவிடத்தில் அமா்ந்து மது அருந்தினராம்.

அப்போது இருவருக்குமிடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில் மாரியப்பன் அருகில் இருந்த கல்லால் ஜோசப்ராஜாவை தாக்கி, துணியால் அவரது கழுத்தை நெரித்துக் கொலை செய்தாராம்.

இதையடுத்து, திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்தில் சந்தேகத்துக்கிடமான வகையில் சுற்றித்திரிந்த மாடசாமியைப் பிடித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டதில், அவா் கொலை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.

பின்னா் சம்பவ இடத்துக்குச் சென்ற மேலப்பாளையம் போலீஸாா், ஜோசப்ராஜாவின் உடலைக் கைப்பற்றி திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

மேலும் இச்சம்பம் குறித்து வழக்குப் பதிவு செய்து, மாடசாமியைக் கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.