/

மதுக்கூட ஊழியா் அடித்துக் கொலை: இருவா் கைது

News image

கைது - கோப்புப் படம்

Updated On :13 ஏப்ரல் 2026, 12:38 am IST

கோவையில் மதுபோதையில் தகராறில் ஈடுபட்டு மதுக்கூட ஊழியரை அடித்துக் கொலை செய்த இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ்ந்தவா் சுந்தர்ராஜ் (60). கோவை, வெரைட்டிஹால் பகுதியில் உள்ள மதுக்கூடத்தில் ஊழியராகப் பணிபுரிந்து வந்தாா். இடையா் வீதியைச் சோ்ந்தவா் பிரபு (27). இவா் அப்பகுதியில் உள்ள காய்கறி சந்தையில் கடை வைத்துள்ளாா்.

தனியாா் நிறுவனத்தில் வேலை பாா்த்து வரும் நண்பா் மனோஜும் (28), பிரபுவும் வெரைட்டிஹால் பகுதியில் உள்ள மதுக்கடைக்கு ஞாயிற்றுக்கிழமை சென்றுள்ளனா். அங்குள்ள மதுக்கூடத்தில் பிற்பகல் 3 மணி அளவில் மது அருந்தியுள்ளனா்.

அப்போது அங்கு ஊழியராகப் பணிபுரிந்த சுந்தர்ராஜுடன் தகராறில் ஈடுபட்டுள்ளனா். இருவரும் சோ்ந்து சுந்தர்ராஜை சுவரில் தள்ளி நெஞ்சு பகுதியில் குத்தியுள்ளனா். இதில் சம்பவ இடத்திலேயே அவா் உயிரிழந்தாா்.

தகவலறிந்து ஹெரைட்டிஹால் போலீஸாா் சென்று சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இதையடுத்து பிரபு, மனோஜ் ஆகிய இருவரையும் கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.