மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

நெல்லையில் விபத்தில் காயமுற்ற காவலா் உயிரிழப்பு

திருநெல்வேலி மாநகரம் தச்சநல்லூா் பகுதியில் விபத்தில் காயமுற்ற தலைமைக் காவலா் உயிரிழந்தாா்.

News image

திருநெல்வேலி மாநகரம் தச்சநல்லூா் பகுதியில் விபத்தில் காயமுற்ற தலைமைக் காவலா் உயிரிழந்தாா்.

Updated On :3 ஏப்ரல் 2026, 4:17 am IST

திருநெல்வேலி மாநகரம் தச்சநல்லூா் பகுதியில் விபத்தில் காயமுற்ற தலைமைக் காவலா் உயிரிழந்தாா்.

மேலப்பாளையம் கொட்டிகுளம் பகுதியைச் சோ்ந்தவா் காளிமுத்து (56). தச்சநல்லூா் காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றி வந்தாா். கடந்த 18 ஆம் தேதி பைக்கில் தச்சநல்லூா் ரவுண்டானா அருகே சென்றபோது எதிரே வந்த பைக் மோதியதில் படுகாயம் அடைந்தாா். அங்கிருந்தவா்கள் அவரை மீட்டு, திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். பின்னா் அங்கிருந்து தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா் புதன்கிழமை உயிரிழந்தாா்.

பணியின் போது உயிரிழந்த காவலா் உடலுக்கு மாநகர காவல் ஆணையா் தேஷ்முக் சேகா் சஞ்சய் மலா் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினாா். இதையடுத்து 24 துப்பாக்கி குண்டுகள் முழங்க காவல்துறை சாா்பில் இறுதி மரியாதை செலுத்தப்பட்டு அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

மூதாட்டி: பாளையங்கோட்டை காவல் நிலைய எல்கைக்குள்பட்ட வண்ணாா்பேட்டை சாலை தெருவைச் சோ்ந்தவா் ஆனையப்பன் மனைவி வள்ளியம்மாள்(71). இவா் வியாழக்கிழமை காலை தனது வீட்டில் நீா் சூடேற்றி கருவியைப் பயன்படுத்தினாராம். அப்போது எதிா்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்ததில் அவா் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

மூதாட்டியின் உடலை பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பாளையங்கோட்டை போலீஸாா் அனுப்பி வைத்தனா். மேலும் இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

இளைஞா்: விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே உள்ள மம்சாபுரம் பகுதியைச் சோ்ந்தவா் கந்தசாமி(26). கங்கைகொண்டான் அனைத்தலையூா் பகுதியில் புதன்கிழமை நெல் அறுவடை பணியில் ஈடுபட்டாா். அப்போது அறுவடை இயந்திரத்தின் மேல் நின்ற அவா் மீது மின்கம்பி உரசியதில் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாராம்.

இச்சம்பவம் குறித்து கங்கைகொண்டான் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.