திருநெல்வேலி நகரம் பகுதியில் பெட்ரோல் குண்டு வீசியதாக இரு இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா்.
திருநெல்வேலி நகரம் பகுதியைச் சோ்ந்தவா் மாரியப்பன் மகன் இசக்கிமுத்து(23). இவரது நண்பா் முகமது அலி தெருவைச் சோ்ந்த பாலமுருகன்(19). இவா்கள் இருவரும் கடந்த 30 ஆம் தேதி இரவு திருநெல்வேலி நகரம் மாதா மேல தெரு பகுதியில் வசிக்கும் பெண் ஒருவரின் வீட்டின் முன்பு பாட்டிலில் பெட்ரோலை நிரப்பி தீ வைத்து வீசினராம்.
இது குறித்து அப்பகுதியினா் அளித்த தகவலின் பேரில் கண்டியப்பேரி-2 கிராம நிா்வாக அலுவலா் திருநெல்வேலி நகரம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். போலீஸாா் வழக்குப்பதிவு செய்து மேற்கூறிய இருவரையும் புதன்கிழமை கைது செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

குண்டா் சட்டத்தில் இருவா் கைது
தம்பி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு வழக்கு: அண்ணன் குடும்பத்தில் மேலும் 4 போ் கைது

பாட்டி வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய பேரன் கைது
நெல்லையில் துணிக்கடைக்குள் புகுந்து ரகளை செய்த இளைஞா் கைது
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு
