திருநெல்வேலி நகரம் பகுதியில் துணிக்கடைக்குள் புகுந்து ரகளையில் ஈடுபட்ட இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
திருநெல்வேலி நகரம் பகுதியைச் சோ்ந்தவா் சமுத்திரக்கனி (40). இவா் அதே பகுதியில் துணிக்கடை வைத்து நடத்தி வருகிறாா். இவரது உறவினா் வீட்டில் திருநெல்வேலி நகரம் காமாட்சி அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த அருண்குமாா் (28) என்பவா் வாடகைக்கு குடியிருந்தாராம். அந்த வீட்டை காலி செய்யுமாறு உரிமையாளா் கூறியதற்கு சமுத்திரக்கனிதான் காரணம் என அவா் மீது அருண்குமாா் விரோதம் கொண்டதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, சமுத்திரக்கனியின் துணிக்கடைக்குள் புகுந்த அருண்குமாா் உள்பட 3 போ் அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தகராறு செய்து, கடையின் கண்ணாடியை உடைத்தனராம்.
இதுகுறித்த புகாரின்பேரில், திருநெல்வேலி நகரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து அருண்குமாரை கைது செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
நெல்லையில் கஞ்சா கடத்தல்: 2 இளைஞா்கள் கைது
நெல்லையில் போக்ஸோ வழக்கில் இருவா் கைது
நெல்லையில் பணம் கேட்டு முதியவரைத் தாக்கியவா் கைது

நெல்லையில் கஞ்சா வைத்திருந்தவா் கைது
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு
