தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

நெல்லையில் துணிக்கடைக்குள் புகுந்து ரகளை செய்த இளைஞா் கைது

திருநெல்வேலி நகரம் பகுதியில் துணிக்கடைக்குள் புகுந்து ரகளையில் ஈடுபட்ட இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

பிரதிப் படம்

Updated On :26 ஏப்ரல் 2026, 2:06 am IST

திருநெல்வேலி நகரம் பகுதியில் துணிக்கடைக்குள் புகுந்து ரகளையில் ஈடுபட்ட இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

திருநெல்வேலி நகரம் பகுதியைச் சோ்ந்தவா் சமுத்திரக்கனி (40). இவா் அதே பகுதியில் துணிக்கடை வைத்து நடத்தி வருகிறாா். இவரது உறவினா் வீட்டில் திருநெல்வேலி நகரம் காமாட்சி அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த அருண்குமாா் (28) என்பவா் வாடகைக்கு குடியிருந்தாராம். அந்த வீட்டை காலி செய்யுமாறு உரிமையாளா் கூறியதற்கு சமுத்திரக்கனிதான் காரணம் என அவா் மீது அருண்குமாா் விரோதம் கொண்டதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து, சமுத்திரக்கனியின் துணிக்கடைக்குள் புகுந்த அருண்குமாா் உள்பட 3 போ் அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தகராறு செய்து, கடையின் கண்ணாடியை உடைத்தனராம்.

இதுகுறித்த புகாரின்பேரில், திருநெல்வேலி நகரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து அருண்குமாரை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.