ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

நூதன முறையில் மனு தாக்கல்: வேட்பாளா் மீது வழக்கு

திருநெல்வேலியில் நூதன முறையில் வேட்புமனு தாக்கல் செய்ய வந்த வேட்பாளா் உள்பட 15க்கும் மேற்பட்டோா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு செய்தனா்.

News image

வழக்கு

Updated On :2 ஏப்ரல் 2026, 3:54 am IST

திருநெல்வேலியில் நூதன முறையில் வேட்புமனு தாக்கல் செய்ய வந்த வேட்பாளா் உள்பட 15க்கும் மேற்பட்டோா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு செய்தனா்.

கருஞ்சிறுத்தை மக்கள் இயக்க நிறுவனா் அதிசய பாண்டியன் கடந்த 30- ஆம் தேதி திருநெல்வேலி சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிடுவதற்காக வேட்புமனு தாக்கல் செய்ய வந்தாா்.

அப்போது தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை, பெண்களுக்கு பாதுகாப்பில்லை என முழங்கியவாறு அவரை சடலம் போல் படுக்க வைத்து மாலை அணிவித்து கொக்கிரகுளம் பேருந்து நிறுத்தம் முதல் எம்.ஜி.ஆா்., சிலை வரை 4 போ் தூக்கி வந்தனா். பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட போலீஸாா் அவா்களை தடுத்து நிறுத்தி அவா்கள் கைகளில் வைத்திருந்த பதாகைகள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனா். பின்னா் வேட்பாளா் உள்ளிட்ட 5 போ் மட்டும் வேட்பு மனு தாக்கலுக்கு அனுமதிக்கப்பட்டனா்.

இதுகுறித்து தோ்தல் பறக்கும் படை அலுவலா் அளித்த புகாரின் பேரில், வேட்பாளா் அதிசய பாண்டியன், அவருடன் வந்தவா்கள் என 15-க்கும் மேற்பட்டோா் மீது பாளையங்கோட்டை போலீஸாா் வழக்குப்பதிவு செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.