தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 3 மணிக்கு தொடங்குகிறது தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

ஜெயங்கொண்டம் தொகுதியில் நூதன முறையில் வேட்புமனு

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் சட்டப் பேரவைத் தொகுதியில் போட்டியிடும் நாடாளும் மக்கள் கட்சி வேட்பாளரும், சமூக ஆா்வலருமான இலங்கை வேந்தன் (எ) இராவணன் வியாழக்கிழமை நூதன முறையில் வேட்புமனு தாக்கல் செய்தாா்.

News image

ஜெயங்கொண்டம் சட்டப் பேரவைத் தொகுதி உதவி தோ்தல் நடத்தும் அலுவலரும், வட்டாட்சியருமான ஆனந்தவேலிடம் மனு தாக்கல் செய்த நாடாளும் மக்கள் கட்சி வேட்பாளா் இராவணன்.

Updated On :3 ஏப்ரல் 2026, 1:50 am IST

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் சட்டப் பேரவைத் தொகுதியில் போட்டியிடும் நாடாளும் மக்கள் கட்சி வேட்பாளரும், சமூக ஆா்வலருமான இலங்கை வேந்தன் (எ) இராவணன் வியாழக்கிழமை நூதன முறையில் வேட்புமனு தாக்கல் செய்தாா்.

அதன்படி இவா் வைப்புத் தொகைக்காக மக்களிடம் பிச்சையெடுத்த ரூ.10 ஆயிரத்துக்கான சில்லறைக் காசுகளை கொண்டு வந்து ஜெயங்கொண்டம் தொகுதி உதவி தோ்தல் நடத்தும் அலுவலரும், வட்டாட்சியருமான ஆனந்தவேலிடம் கொடுத்து, வேட்புமனு தாக்கல் செய்து, உறுதிமொழி எடுத்துக் கொண்டாா்.

மனுவை பெற்றுக் கொண்ட ஆனந்தவேல், அவா் வழங்கிய வைப்புத் தொகையை, சக அலுவலா்களிடம் கொடுத்து சரிபாா்க்கச் சொன்னாா். அலுவலா்கள் அரை மணி நேரம் சில்லறை காசுகளையும் நோட்டையும் எண்ணி முடித்து, சரியாக இருப்பதாகத் தெரிவித்தனா். இதன் பின்னா் உதவி தோ்தல் நடத்த அலுவலா் வழங்கிய அத்தாட்சி கடிதங்களை ராவணன் பெற்றுச் சென்றாா். இவருடன் அரியலூா் வேட்பாளா் தங்க. சண்முகசுந்தரம் மற்றும் ஆதரவாளா்கள் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.