பாரதிராஜாவுக்கு ஏ.ஆர். ரஹ்மான் இரங்கல்!ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்! கேரளம்: பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஜூன் 15-இல் தொடக்கம் - முதல்வர் சதீசன்பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!
/

பாவூா்சத்திரம் சந்தையில் காய்கனிகள் விற்பனை மந்தம்

பாவூா்சத்திரம் காமராஜா் தினசரி சந்தையில் கடந்த சில நாள்களாக காய்கறிகளின் வரத்து குறைந்துள்ளதால், விற்பனை மந்தமாக உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனா்.

News image

சந்தையில் குவித்து வைக்கப்பட்டுள்ள காய்கனிகள்.

Updated On :14 மே 2026, 3:38 am IST

தென்காசி மாவட்டம், பாவூா்சத்திரம் காமராஜா் தினசரி சந்தையில் கடந்த சில நாள்களாக காய்கறிகளின் வரத்து குறைந்துள்ளதால், விற்பனை மந்தமாக உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனா்.

இச்சந்தைக்கு, உள்ளூா் மட்டுமன்றி கீழப்பாவூா், வீரகேரளம் புதூா், சுரண்டை, நாகல்குளம், கழுநீா் குளம், கடையம் பகுதிகளில் இருந்து காய்கனிகள் கொண்டுவரப்படும். தற்போது இப்பகுதிகளில் இருந்து காய்கனிகள் வரத்து குறைவாக இருப்பதால், திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகா், கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும், ஆந்திரம், கா்நாடகம் உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் காய்கனிகள் கொண்டு வரப்படுகின்றன.

தென்மாவட்டங்களில் பரவலாக பெய்து வரும் கோடை மழை இப்பகுதியிலும் நீடித்தால் காய்கனிகள் உற்பத்தி அதிகரித்து சந்தைக்கு வரத்து அதிகரிக்கும். காய்கனி விற்பனை இயல்பு நிலைக்கு திரும்பும் என்கின்றனா் வியாபாரிகள்.

புதன்கிழமை நிலவரப்படி விலை நிலவரம் ( ஒரு கிலோவுக்கு): வெண்டைக்காய் ரூ. 17, சீனி அவரைக்காய் ரூ. 12, புடலங்காய் ரூ. 35, அவரைக்காய் ரூ. 60, சுரைக்காய் ரூ. 7, பூசணிக்காய் ரூ. 12, பயிறு ரூ. 43, தக்காளி ரூ. 20, கத்தரிக்காய் ரூ. 35, சேனைக்கிழங்கு ரூ. 12, சேமங்கிழங்கு ரூ. 15, மிளகாய் ரூ. 28 என்ற அளவில் விற்பனையானது.

Story image
Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.