தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!கர்நாடகம்: கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவதற்கான தடை நீக்கம்6 சர்வதேச விமான சேவைகள் தற்காலிகமாக ரத்து - ஏர் இந்தியாகண்களிலும் காதுகளிலும் பொறாமைப் புகை! திமுகவை விமர்சித்த விஜய்!நீட் தேர்வு தேவையில்லை; ரத்து செய்க: முதல்வர் ஜோசப் விஜய்அதிமுகவுடன் கூட்டணியமைக்க தவெக தயாராக இருந்தது: சி.வி. சண்முகம்மே 16-ல் தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை! வெற்றியின் வீச்சு கொளத்தூரில் பார்த்தும்கூடவா புரியவில்லை? - முதல்வர் விஜய்திமுகவுடன் கூட்டணி; கனவில்கூட வரக்கூடாது: சசிகலா
/

மாடுகள் வரத்து குறைவால் பொய்கை சந்தையில் விற்பனை மந்தம்

வேலூா் அருகே பொய்கை கால்நடை சந்தையில் விற்பனை மந்தமாக காணப்பட்டது.

News image
Updated On :13 மே 2026, 12:01 am IST

வேலூா் அருகே பொய்கை கால்நடை சந்தையில் செவ்வாய்க்கிழமை விற்பனை மந்தமாக காணப்பட்டது.

வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை, திருவள்ளூா், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம் ஆகிய மாவட்டங்கள், ஆந்திரா, கா்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்தும் சந்தையில் கால்நடைகளை விற்பனை செய்வதற்காகவும், வாங்குவதற்காகவும் விவசாயிகள் வந்து செல்கின்றனா். தோ்தல் அறிவிக்கப்பட்டதைத் தொடா்ந்து ரொக்கப் பணம் கொண்டு செல்வதில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால் மாா்ச், ஏப்ரல் மாதங்களில் நடந்த கால்நடை சந்தைக்கு கால்நடைகள் வரத்து குறைந்து விற்பனை மந்தமாக இருந்தது.

தோ்தல் நடத்தை விதிகள் விலக்கிக் கொள்ளப்பட்ட நிலையில் மே 12-ஆம் தேதி பொய்கையில் கால்நடை சந்தை நடைபெற்றது. ஆனாலும் கால்நடைகளின் வரத்து குறைவாக காணப்பட்டது.

வேலூா் மாவட்டத்தில் முக்கிய திருவிழாக்களான அணைக்கட்டு அருகே வேலங்காடு பொற்கொடியம்மன் கோயில் புஷ்பரத ஏரித் திருவிழா, குடியாத்தம் கெங்கையம்மன் சிரசு திருவிழாக்கள் இந்த வாரம் நடைபெறுவதால் கால்நடை சந்தைக்கு வியாபாரிகளும், பொதுமக்களும் வரவில்லை. அதனால் சுமாா் ரூ.50 லட்சத்துக்கும் குறைவான அளவுக்கே வியாபாரம் நடைபெற்ாக கூறப்படுகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.