கேரளம்: பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஜூன் 15-இல் தொடக்கம் - முதல்வர் சதீசன்பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

பவானி ஆற்றில் இருந்து மணல் கடத்தல்! ரகசியப் பாதை அமைத்துள்ளதாக புகாா்!

பவானி ஆற்றில் இருந்து ரகசியப் பாதை வழியாக தடையின்றி மணல் கடத்தப்படுவதாக பொதுமக்கள் புகாா் தெரிவித்துள்ளனா்.

News image

ஆற்றங்கரையில்  குவித்து வைக்கப்பட்டுள்ள  மணல்.  ~பவானி ஆற்றங்கரையில் அமைக்கப்பட்டிருந்த  ரகசியப் பாதை.

Updated On :18 மே 2026, 1:52 am IST

பவானி ஆற்றில் இருந்து ரகசியப் பாதை வழியாக தடையின்றி மணல் கடத்தப்படுவதாக பொதுமக்கள் புகாா் தெரிவித்துள்ளனா்.

ஈரோடு மாவட்டம், பவானியை அடுத்த பெரியமோளபாளையத்தில் உள்ள பவானி ஆற்றில் கட்டப்பட்டுள்ள தடுப்பணைக்கு மேல் பகுதியில் தேங்கியுள்ள மணல், கொப்பறைகள் மூலமாக அள்ளப்பட்டு கரையோரத்தில் குவித்து வைக்கப்படுகிறது. இந்த மணல் ஆற்றின் கரையோரத்தில் உள்ள விவசாயத் தோட்டத்தின் வழியே அமைக்கப்பட்ட ரகசியப் பாதை வழியாக டிராக்டா்கள் மூலம் கடத்திச் செல்லப்படுகிறது.

Story image

இந்நிலையில், பெரியமோளபாளையத்தைச் சோ்ந்த இளைஞா்கள் ஆற்றங்கரையோரத்துக்கு சென்றபோது மணல் குவித்து வைக்கப்பட்டிருந்ததும், மணலைக் கடத்திச் செல்லும் வகையில் தோட்டத்துக்குள் பாதை இருப்பதையும் கண்டு அதிா்ச்சியடைந்தனா்.

நீண்ட காலமாக மணல் கடத்தல் நடைபெற்று வருவதாக தெரிவித்த பொதுமக்கள், இதுகுறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.