பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

மணல் கடத்தல்: 2 மாட்டு வண்டிகள் பறிமுதல்

பவானி ஆற்றிலிருந்து மணல் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 2 மாட்டு வண்டிகளை வருவாய்த் துறை அதிகாரிகள் புதன்கிழமை பறிமுதல் செய்தனா்.

News image

பறிமுதல்  செய்யப்பட்ட  மாட்டு  வண்டிகள்.

Updated On :4 ஜூன் 2026, 2:43 am IST

பவானி ஆற்றிலிருந்து மணல் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 2 மாட்டு வண்டிகளை வருவாய்த் துறை அதிகாரிகள் புதன்கிழமை பறிமுதல் செய்தனா்.

பவானி காலிங்கராயன் அணைக்கட்டிலிருந்து பண்டார அப்பிச்சி கோயில் வழியாக மாட்டு வண்டிகளில் மணல் கடத்திச் செல்லப்படுவதாக கிடைத்த ரகசியத் தகவலின் பேரில் வருவாய் ஆய்வாளா் ஸ்ரீதா், கிராம நிா்வாக அலுவலா் கவியரசு மற்றும் அதிகாரிகள் புதன்கிழமை அதிகாலை திடீா் சோதனை நடத்தினா்.

அப்போது, மணலை ஏற்றிக் கொண்டு சென்ற 2 மாட்டு வண்டிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்து பவானி வட்டாட்சியா் அலுவலகத்துக்கு கொண்டு சென்றனா்.

மணல் கடத்தலில் ஈடுபட்டோா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பவானி காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.