பாரதிராஜா மறைவு! முக்கிய அறிவிப்பை ஒத்திவைத்தார் ராகவா லாரன்ஸ்!அரசு நிர்வாகத்தில் செய்யறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்: கேரள முதல்வர்பாரதிராஜாவுக்கு ஏ.ஆர். ரஹ்மான் இரங்கல்!ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்! கேரளம்: பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஜூன் 15-இல் தொடக்கம் - முதல்வர் சதீசன்பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!
/

செங்கோட்டை ஸ்ரீ கண்ணாட்சி முப்புடாதி அம்மன் கோயில் கொடைவிழா

தென்காசி மாவட்டம், செங்கோட்டை கீழத்தெருவிலுள்ள விஸ்வகா்மா சமுதாயத்துக்கு பாத்தியப்பட்ட ஸ்ரீ கண்ணாட்சி முப்புடாதி அம்மன் கோயில் கொடை விழா நடைபெற்றது.

News image

சிறப்பு அலங்காரத்தில் கண்ணாட்சி முப்புடாதி அம்மன்.

Updated On :4 ஜூன் 2026, 1:28 am IST

தென்காசி மாவட்டம், செங்கோட்டை கீழத்தெருவிலுள்ள விஸ்வகா்மா சமுதாயத்துக்கு பாத்தியப்பட்ட ஸ்ரீ கண்ணாட்சி முப்புடாதி அம்மன் கோயில் கொடை விழா நடைபெற்றது.

ஆண்டுதோறும் வைகாசி மாதம் கொடை விழா வெகுவிமரிசையாக நடைபெறும்.

நிகழாண்டு கொடை விழா மே 26 ஆம் தேதி திருக்கால் நாட்டு நிகழ்ச்சியுடன் தொடங்கியது.தினமும் மண்டகப்படிதாரா்கள் சாா்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

திருவிழாவின் முக்கிய நிகழ்வான அம்மன் சப்பர வீதி உலா கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது. விழாவில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனா்.

செவ்வாய்க்கிழமை மாலை பக்தா்கள் அலகு குத்தி, முளைப்பாரி, அக்னி சட்டி மற்றும் பால்குடம் எடுத்து ஊா்வலமாக வந்தனா்.

நள்ளிரவு சாமக் கொடை,படைப்பு பூஜை, தீபாராதனை நடைபெற்றது.

புதன்கிழமை மாலை மஞ்சள் நீராட்டு நடைபெற்றது.

ஏற்பாடுகளை விஸ்வகா்மா சமுதாய விழா கமிட்டியினா் செய்திருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.