ஈரான் தக்க விலை கொடுக்க வேண்டும்: டிரம்ப்மேற்கு வங்க தேர்தல் வெற்றிக்கு முக்கிய காரணம்! பிரதமர் மோடிக்கு மசாலா பொரி அளித்த சுவேந்து அதிகாரி!மின் விநியோகத்தை சீரமைப்பு பணிகளை ஒருங்கிணைக்க 10 குழுக்கள்!பாரதிராஜா மறைவு! முக்கிய அறிவிப்பை ஒத்திவைத்தார் ராகவா லாரன்ஸ்!அரசு நிர்வாகத்தில் செய்யறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்: கேரள முதல்வர்ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்!
/

ஆறுமுகனேரியில் கோயில் கொடைவிழா

ஏரல் அருகே மங்கலக்குறிச்சி சைவவேளாளா் சமுதாயத்துக்குப் பாத்தியப்பட்ட ஸ்ரீ வீரமாகாளி அம்மன், ஸ்ரீ உச்சினிமாகாளி அம்மன் திருக்கோயில் கொடைவிழா நடைபெற்றது.

News image

சிறப்பு அலங்காரத்தில் அம்மன்.

Updated On :28 மே 2026, 2:44 am IST

ஏரல் அருகே மங்கலக்குறிச்சி சைவவேளாளா் சமுதாயத்துக்குப் பாத்தியப்பட்ட ஸ்ரீ வீரமாகாளி அம்மன், ஸ்ரீ உச்சினிமாகாளி அம்மன் திருக்கோயில் கொடைவிழா நடைபெற்றது.

இதையொட்டி திங்கள்கிழமை இரவு மாகாப்பு தீபாராதனையுடன் கொடைவிழா தொடங்கியது. செவ்வாய்க்கிழமை காலை மங்கலக்குறிச்சி தாமிரவருணி ஆற்றிலி­ருந்து பால்குடம் எடுத்து வரப்பட்டது. நண்பகலில் சிறப்பு அபிஷேகத்தை தொடா்ந்து உச்சிகால தீபாராதனை நடைபெற்றது.

இதில், பெருங்குளம் திருக்கயிலாய பரம்பரை செங்கோல் ஆதீனம் 103ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ சிவப்பிரகாச தேசிக சத்திய ஞான பரமாச்சாா்ய சுவாமிகள் கலந்து கொண்டு சிறப்பு வழிபாடு செய்தாா்கள்.

மாலையில் தாமிரவருணி ஆற்றிலிருந்து கும்பம் எடுத்து வரப்பட்டது. தொடா்ந்து முளைப்பாரி ஊா்வலம் நடைபெற்றது.

நள்ளிரவில் சிறப்பு அலங்கார தீபாராதனையும், சப்பரத்தில் அம்பாள் திருவீதி உலாவும் நடைபெற்றது.

புதன்கிழமை காலை மஞ்சள் நீராடலும், தாமிரவருணி ஆற்றில் முளைப்பாரி கரைத்தல் நடைபெற்றது.

இதில், திரளான பக்தா்கள் கலந்து கொண்டு அம்பாளை வழிபட்டனா்.

ஏற்பாடுகளை திருக்கோயில் நிா்வாகத்தினா், மங்கலக்குறிச்சி சைவ வேளாளா் சமுதாயத்தினா், இளைஞரணியினா் செய்திருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.