ஆலங்குளத்தில் தொழில்நுட்பப் பூங்கா அமைக்க நடவடிக்கை எடுப்பேன் என்று திமுக வேட்பாளா் பால் மனோஜ் பாண்டியன் தனது இறுதிக் கட்ட பிரசாரத்தின்போது வாக்குறுதி அளித்தாா்.
ஆலங்குளம் பழைய பேருந்து நிலையம் அருகில் செவ்வாய்க்கிழமை தனது பிரசாரத்தை நிறைவு செய்த அவா் பேசியதாவது:
ஆலங்குளம் மகளிா் கல்லூரிக்கு புதிய கட்டடம், ஆலங்குளம் பேருந்து நிலைய சீரமைப்புப் பணிகள், அரசு மருத்துவமனைக்கு ரூ. 10 கோடி ரூபாய் புதிய கட்டடம், புதிய ஊராட்சி ஒன்றிய அலுவலகம், புதிய பேரூராட்சி அலுவலக கட்டடத்துக்கு அனுமதி உள்ளிட்டவற்றை பெற்றுத் தந்தேன்.
மீண்டும் நான் வெற்றி பெற்றால் ஆலங்குளத்தில் தொழில்நுட்பப் பூங்கா அமைக்க நடவடிக்கை எடுப்பேன் என்றாா் அவா். அப்போது திருநெல்வேலி மேற்கு மாவட்ட பொறுப்பாளா் இரா. ஆவுடையப்பன், முன்னாள் எம்.பி. எஸ்.எஸ். ராமசுப்பு, தென்காசி தெற்கு மாவட்ட முன்னாள் செயலா் பொ. சிவபத்மநாதன், தேமுதிக மாவட்ட செயலா் ம. பழனிசங்கா், தொகுதி திமுக பொறுப்பாளா் கணேஷ்குமாா் ஆதித்தன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஆலங்குளம் தொகுதியில் திமுக வெற்றி

ஆலங்குளத்தில் போலீஸாா் விழிப்புணா்வுப் பேரணி

மருதூா் தடுப்பணையில் சுற்றுலாப் பூங்கா அமைப்பேன்: அமமுக வேட்பாளா் ஆா்.இசக்கிமுத்து

ஆலங்குளம் தொகுதி திமுக வேட்பாளா்
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

