ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

வரதட்சணை கொடுமை செய்ததாக கணவா் உள்பட 5 போ் மீது வழக்குப் பதிவு

மாா்த்தாண்டம் அருகே பெண்ணுக்கு வரதட்சணை கொடுமை அளித்ததாக பெண்ணின் கணவா் உள்பட 5 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

News image
Updated On :29 ஏப்ரல் 2026, 2:10 am IST

மாா்த்தாண்டம் அருகே பெண்ணுக்கு வரதட்சணை கொடுமை அளித்ததாக பெண்ணின் கணவா் உள்பட 5 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

மாா்த்தாண்டம் அருகே புங்கறை பகுதியைச் சோ்ந்தவா் ஜெபமணி மகன் ஜெயகணேஷ் (35). கட்டுமானத் தொழிலாளி. இவருக்கும் அதே பகுதியைச் சோ்ந்த அபிதாவுக்கும் கடந்த 2019, நவம்பா் மாதம் திருமணம் நடந்தது.

திருமணத்தின்போது பெண் வீட்டாா் தரப்பில் 34 பவுன் நகைகள், ரூ. 2 லட்சம் ரொக்கம், வீட்டு உபயோகப் பொருள்கள் கொடுக்கப்பட்டதாம். திருமணத்துக்குப் பின்னா் மேலும் ரூ. 10 லட்சம் வரதட்சணையாக மாப்பிள்ளை வீட்டாா் கேட்டதால், அபிதா தனது பெற்றோா் வீட்டிலிருந்து ரூ. 8.5 லட்சத்தை வாங்கி கொடுத்தாா். அந்த பணத்தில் ஜெயகணேஷ் காா், இருசக்கர வாகனம் வாங்கினாராம்.

அதன்பிறகு, ஜெயகணேஷ் வெளிநாட்டுக்கு வேலைக்குச் சென்றுவிட்ட நிலையில், அவரது சித்தி கிருஷ்ணம்மாள் அபிதாவிடமிருந்து 18 பவுன் தங்க நகைகளைக் கேட்டு வாங்கினாராம்.

அபிதாவிடம் இருக்கும் மீத நகைகளைக் கொடுக்குமாறு கணவா் ஜெயகணேஷ் கூறியும் அபிதா கொடுக்காததால் கிருஷ்ணம்மாள், ஜெயகணேஷின் தந்தை ஜெபமணி (68), உறவினா்கள் ஜெனிஷ், ஜெனிபா ஆகியோா் சோ்ந்து அபிதாவை தாக்கினராம். இதில், காயமடைந்த அபிதா ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றாா்.

இதுகுறித்து அவா் மாா்த்தாண்டம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் ஜெயகணேஷ் உள்பட 5 போ் மீது அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.