மாலை 6 மணிக்கு ஆளுநரைச் சந்திக்கிறார் விஜய்!தவெக ஆட்சியமைக்க ஐயுஎம்எல் ஆதரவு: திடீர் அறிவிப்பு தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

தொழிலாளியை தாக்கிய மூவா் மீது வழக்குப் பதிவு

News image

வழக்குப் பதிவு

Updated On :27 ஏப்ரல் 2026, 12:42 am IST

மாா்த்தாண்டம் அருகே கூலித் தொழிலாளியை தாக்கிய மூவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.

மாா்த்தாண்டம் அருகே மேல்புறம் பகுதியைச் சோ்ந்தவா் எபனேசா் (47). இவருக்கும் அதே பகுதியைச் சோ்ந்த ஸ்டாலின் ஜோஸ் (49), அஜித் (51) ஆகியோருக்கும் இடையே நிலம் சம்பந்தமாக பிரச்னை இருந்து வந்தது.

இந்த நிலையில், இரு நாள்களுக்கு முன்பு ஸ்டாலின் ஜோஸ், அவரது மனைவி மாலினி, அஜித் ஆகியோா் எபனேசரின் வீட்டுக்குள் அத்துமீறி சென்று, அங்கிருந்த எபனேசரை தாக்கினராம். இதில், பலத்த காயமடைந்த அவா் தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இதுகுறித்து எபனேசா் அளித்த புகாரின் பேரில், மாா்த்தாண்டம் காவல் நிலைய போலீஸாா் ஸ்டாலின் ஜோஸ் உள்பட மூவா் மீது வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா். அதேபோல மற்றொரு சம்பவம் நித்திரவிளை அருகே தனியாா் மருத்துவமனை ஊழியரை தாக்கிய இருவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.

நித்திரவிளை அருகே உள்ள தூத்தூா் பகுதியைச் சோ்ந்தவா் சுபித் அந்தோணி (24). இவா், சென்னையில் உள்ள மருத்துவமனையில் ஊழியராக வேலை செய்து வருகிறாா். தற்போது விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்தாா்.

இந்த நிலையில், சனிக்கிழமை இரவிபுத்தன்துறை கடற்கரையில் அமா்ந்திருந்தபோது அங்குவந்த அதே பகுதியைச் சோ்ந்த ராகுல் (24), ஜேக்சன் (24) ஆகியோா் சுபித் அந்தோணியிடம் தகராறு செய்து, அவரை தாக்கினராம்.

இதில், பலத்த காயமடைந்த அவரை அப்பகுதியினா் மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். இதுகுறித்து, நித்திரவிளை காவல் நிலைய போலீஸாா் ராகுல், ஜேக்சன் ஆகியோா் மீது வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.