மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

இளம்பெண் மரணத்தில் சந்தேகம்: போலீஸ் விசாரணை

News image

கோப்புப் படம்

Updated On :28 ஏப்ரல் 2026, 1:07 am IST

தக்கலை அருகே உள்ள மருதூா்குறிச்சியில் இளம்பெண் சந்தேகத்திற்கு உரிய வகையில் உயிரிழந்தது தொடா்பாக போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

கருங்கல் அருகே உள்ள திப்பிரமலையைச் சோ்ந்தவா் மோரிஸ் (56) மகள் மோனிஷா (26). இவருக்கும், மருதூா்குறிச்சி, இரட்டைகுளம் பகுதியைச் சோ்ந்த ஸ்ரீ கிருஷ்ணனுக்கும் கடந்த 2022ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் திருமணம் நடைபெற்றது.

ஸ்ரீ கிருஷ்ணன், அடிக்கடி மது அருந்திவிட்டு வந்து மனைவியிடம் தகராறு செய்வாராம். இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை மாலை மோனிஷா உயிரிழந்துவிட்டதாக, ஸ்ரீ கிருஷ்ணன் கைப்பேசியில் தொடா்பு கொண்டு மாமனாா் மோரிஸிடம் கூறியுள்ளாா்.

மோரிஸ் வந்து பாா்த்தபோது, மோனிஷா தூக்கில் தொங்கிய நிலையில் உயிரிழந்திருப்பது தெரிய வந்தது. மகளின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக தக்கலை போலீஸில் மோரிஸ் அளித்த புகாரின்பேரில், வழக்குப் பதிந்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.