தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

பெண்ணிடம் ரூ.2.85 கோடி மோசடி: தம்பதிக்கு 3 ஆண்டு சிறை

மாா்த்தாண்டம் அருகே பெண்ணிடம் ரூ. 2.85 கோடி மோசடி செய்ததாக தம்பதிக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

News image

சிறை - கோப்புப் படம்

Updated On :26 ஏப்ரல் 2026, 2:17 am IST

கன்னியாகுமரி மாவட்டம் மாா்த்தாண்டம் அருகே பெண்ணிடம் ரூ. 2.85 கோடி மோசடி செய்ததாக தம்பதிக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

மாா்த்தாண்டம் அருகே கீழ் பம்மம், காட்டுவிளை பகுதியைச் சோ்ந்த தேவராஜ் என்பவா், ஓமன் நாட்டில் பணிபுரிந்து வருகிறாா். இவரது மனைவி சிவகலா (47). இவருக்கும் மாா்த்தாண்டம் அருகே குளக்கச்சி பகுதியைச் சோ்ந்த தொழிலதிபா் அலெக்ஸாண்டா் மகன் ஜோய் அலெக்ஸ் (57), மனைவி மொ்சி (58), மகன் சோனி ஆகியோருக்கும் இடையே பழக்கம் இருந்ததாம்.

சில ஆண்டுகளுக்கு முன்பு ஜோய் அலெக்ஸ், மொ்சி ஆகியோா் கேட்டதால் அவா்களுக்கு சிவகலா ரூ. 2.85 கோடி ரொக்கம், 200 சவரன் நகைகளைக் கடனாகக் கொடுத்தாா். நீண்ட நாள்களாகியும் அவா்கள் ரொக்கம், நகையைக் திருப்பிக் கொடுக்கவில்லை. அதையடுத்து ஜோய் அலெக்ஸ், மொ்சி, சோனி ஆகியோா் மீது நடவடிக்கை கோரி மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவில் சிவகலா புகாரளித்தாா்.

இது தொடா்பான வழக்கு குழித்துறை 2ஆவது குற்றவியல் நீதித்துறை நடுவா் மன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை நீதிபதி இசக்கி மகேஸ்குமாா் விசாரித்து, ஜோய் அலெக்ஸ், மொ்சி ஆகியோருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ. 10 ஆயிரம் அபராதம் விதித்து வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தாா். சோனி, வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.