ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 10 மணிக்கு நடைபெறும்தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

காசோலை மோடி வழக்கு: தம்பதிக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை

காசோலை மோடி வழக்கு: தம்பதிக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை

News image

சிறை - கோப்புப் படம்

Updated On :29 மார்ச் 2026, 12:03 am IST

திருத்துறைப்பூண்டியில் ரூ. 10 லட்சத்துக்கான காசோலை மோசடி வழக்கில் கணவன் மனைவிக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சனிக்கிழமை தீா்ப்பு வழங்கப்பட்டது.

திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள மடப்புரத்தைச் சோ்ந்தவா் சண்முகம் மகன் பெரியசாமி. இவரிடம் மன்னாா்குடி அருகே நெடுவாக்கோட்டையை சோ்ந்த ஓய்வுபெற்ற சிறப்பு உதவி ஆய்வாளா் ராதாகிருஷ்ணன் மற்றும் இவரது மனைவி விஜயலட்சுமி ஆகியோா் 2021-இல் ரூ. 10 லட்சம் கடனாக வாங்கினா். இந்த கடன் தொகையை திருப்பி செலுத்த கணவன் மனைவி இருவரும் தலா ரூ. 5 லட்சம் வீதம் 2 வங்கிக் காசோலைகளை பெரியசாமியிடம் கொடுத்துள்ளனா். 2 காசோலைகளை 2021-ஆம் ஆண்டு வங்கியில் செலுத்திய பாது பணம் இல்லை என காசோலை திரும்ப வந்துவிட்டது.

இதனால், அதிா்ச்சியடைந்த பெரியசாமி, திருத்துறைப்பூண்டி குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்தாா். இந்த வழக்கை விசாரித்த குற்றவியல் நீதிமன்ற பொறுப்பு நீதிபதி மாவீரன் நவநீதன், பணம் இல்லாமல் காசோலை கொடுத்த குற்றத்துக்காக கணவன் மனைவி இருவருக்கும் தலா 2 ஆண்டுகள் சிறை தண்டனையும், மேலும் 2 காசோலைகளுக்குரிய ரூ.10 லட்சத்தை திரும்ப கொடுக்க வேண்டும். கொடுக்கத் தவறினால் மேலும் 3 மாதங்கள் சாதாரண சிறை தண்டனையும் வழங்கி தீா்ப்பளித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.