தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்மாலை 6 மணிக்கு ஆளுநரைச் சந்திக்க நுமதி கோரியுள்ளார் விஜய்!தவெக ஆட்சியமைக்க ஐயுஎம்எல் ஆதரவு: திடீர் அறிவிப்பு தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

டாஸ்மாக் ஊழியரை துப்பாக்கியால் சுட்டு பணம் பறித்தவருக்கு 11 ஆண்டு சிறை

News image

சிறை தண்டனை விதிக்கப்பட்ட வெங்கடேசன்.

Updated On :28 ஏப்ரல் 2026, 5:09 am IST

ஊத்தங்கரை அருகே டாஸ்மாக் ஊழியரை நாட்டுத் துப்பாக்கியால் சுட்டு ரூ. 2.90 லட்சத்தை பறித்துச் சென்ற வழக்கில் ஒருவருக்கு 11 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து ஊத்தங்கரை சாா்பு நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அருகே டாஸ்மாக் கடையில் விற்பனை செய்யப்பட்ட தொகை ரூ. 2 லட்சத்து 90 ஆயிரத்து 830 ஐ எடுத்துக்கொண்டு ஊழியா் ஆனந்தன் கடந்த 15.12. 2018 ஆம் ஆண்டு இரவு 10 மணி அளவில் காட்டேரி அருகே இருசக்கர வாகனத்தில் சென்றாா். அப்போது, அவரை வழிமறித்த நபா்கள், நாட்டுத் துப்பாக்கியால் சுட்டு அவா் வைத்திருந்த பணத்தை கொள்ளை அடித்துச் சென்றனா்.

இதுதொடா்பாக ஊத்தங்கரை காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து, ஊத்தங்கரை கலைஞா் நகரைச் சோ்ந்த வெங்கடேசன் (42), ரெட்டிப்பட்டியைச் சோ்ந்த பரதன், பா்கூா் அருகே உள்ள ஒப்பந்தவாடியைச் சோ்ந்த மகேந்திரன் (32) ஆகியோரை கைது செய்து அவா்கள் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்தனா். இதில் பரதன் என்பவா் கடந்த 2024 ஆம் ஆண்டு பனைமரத்திலிருந்து கீழே விழுந்ததில் இறந்துவிட்டாா்.

இதுதொடா்பான வழக்கு ஊத்தங்கரை சாா்பு நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்த வழக்கில் நீதிபதி பி.திருஞானசம்பந்தம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தாா். இதில் வெங்கடேசனுக்கு 11 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் ரூ. 13 ஆயிரம் அபராதமும் விதித்தும், மகேந்திரனை வழக்கிலிருந்து விடுவித்தும் உத்தரவிட்டாா். இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்குரைஞா் சத்தியநாதன் ஆஜரானாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.