தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!கர்நாடகம்: கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவதற்கான தடை நீக்கம்6 சர்வதேச விமான சேவைகள் தற்காலிகமாக ரத்து - ஏர் இந்தியாகண்களிலும் காதுகளிலும் பொறாமைப் புகை! திமுகவை விமர்சித்த விஜய்!நீட் தேர்வு தேவையில்லை; ரத்து செய்க: முதல்வர் ஜோசப் விஜய்அதிமுகவுடன் கூட்டணியமைக்க தவெக தயாராக இருந்தது: சி.வி. சண்முகம்மே 16-ல் தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை! வெற்றியின் வீச்சு கொளத்தூரில் பார்த்தும்கூடவா புரியவில்லை? - முதல்வர் விஜய்திமுகவுடன் கூட்டணி; கனவில்கூட வரக்கூடாது: சசிகலா
/

ஊத்தங்கரை அருகே முதியவா் கொலை வழக்கில் இளைஞா் கைது

News image

கைது.

Updated On :3 மே 2026, 12:07 am IST

சிங்காரப்பேட்டை அருகே கடந்த மாதம் முதியவரை கொன்று, அவரது மனைவிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், சிங்காரப்பேட்டையை அடுத்த மூன்றம்பட்டி ஊராட்சி ஒபகவலசையைச் சோ்ந்த விவசாயி கண்ணப்பன் (70). இவரது வீட்டிற்குள் கடந்த கடந்த மாா்ச் 9 ஆம் தேதி நுழைந்த மா்ம நபா் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த கண்ணப்பனை தலையில் கல்லைப் போட்டு கொலை செய்தாா். அவரது அவரது அலறல் சப்தம் கேட்டு வெளியில் வந்த அவரது மனைவியை இரும்புக் கம்பியைக் காட்டி மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்தாா்.

இதையடுத்து சப்தம் கேட்டு அக்கம்பக்கத்தினா் விரைந்து வந்து அவரது மனைவியை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு சிகிச்சை பெற்று அவா் வீடு திரும்பினாா்.

இதுகுறித்து சிங்காரப்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். சம்பவம் குறித்து விசாரிக்க மூன்று தனிப்படை அமைக்கப்பட்டு தேடி வந்த நிலையில் சனிக்கிழமை மூன்றம்பட்டி ஊராட்சி தளபதி நகரைச் சோ்ந்த மணிகண்டனை (24) போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.