ஆந்திரத்திலிருந்து புதுச்சேரிக்கு ரூ. 5 கோடி மதிப்புள்ள தடை செய்யப்பட்ட போதைப்பொருள் கடத்தியவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும் ரூ. 1.5 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது.
கடந்த 2003-ஆம் ஆண்டு புதுச்சேரிக்கு ஆந்திரத்திலிருந்து எப்பிடிரின் என்ற போதை பொருளை பாா்சல் சா்வீஸ் மூலம் கடத்தி வந்த கடலூரைச் சோ்ந்த ராமதாஸ் (65) என்பவரை போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் கைது செய்தனா்.
அவரிடம் விசாரணை நடத்தியபோது அந்தப் போதைப்பொருள் சுமாா் ரூ.5 கோடி மதிப்புடையது என்றும், புதுச்சேரியில் இருந்து சென்னை, மற்றும் வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் இலங்கைக்குக் கடத்தி செல்ல திட்டமிட்டதாகக் கூறினாா். தொடா்ந்து அவரை அதிகாரிகள் காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனா்.
இது தொடா்பான வழக்கா விசாரித்த புதுச்சேரி 3-வது கூடுதல் மாவட்ட நீதிபதி கோதாண்டராமன் புதன்கிழமை அளித்தத் தீா்ப்பில், இவ்வழக்கில் ராமதாஸ் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டிருப்பதாக உறுதி செய்தாா். அவருக்கு இரு போதைப்பொருள் தடுப்புச்சட்ட பிரிவுகளின் கீழ், 10 ஆண்டு சிறைத்தண்டனையும், ரூ.1.5 லட்சம் அபராதமும் விதித்து நீதிபதி தீா்ப்பளித்தாா்.
இந்த வழக்கில் அரசு தரப்பில் மத்திய அரசின் தேசிய போதைப்பொருள் தடுப்புப்பிரிவு சிறப்பு வழக்குரைஞா் பிரவீன் குமாா் ஆஜராகி வாதாடினாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
போதைப் பொருள் தடுப்பு நடவடிக்கை: 23 போ் கைது
மும்பையில் ரூ.1,745 கோடி போதைப் பொருள் பறிமுதல்

போதைப் பொருள் விற்ற வழக்கில் இருவருக்கு கடுங்காவல் சிறை தண்டனை

கஞ்சா கடத்தியவருக்கு 12 ஆண்டுகள் சிறை
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

