தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்மாலை 6 மணிக்கு ஆளுநரைச் சந்திக்க நுமதி கோரியுள்ளார் விஜய்!தவெக ஆட்சியமைக்க ஐயுஎம்எல் ஆதரவு: திடீர் அறிவிப்பு தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

போதைப் பொருள் விற்ற வழக்கில் இருவருக்கு கடுங்காவல் சிறை தண்டனை

போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா விற்பனை செய்த வழக்கில் இருவருக்கு கடுங்காவல் சிறைத் தண்டனை விதித்து, கோவை போதைப் பொருள் தடுப்பு நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.

News image

சிறை - பிரதிப் படம்

Updated On :30 ஏப்ரல் 2026, 2:40 am IST

போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா விற்பனை செய்த வழக்கில் இருவருக்கு கடுங்காவல் சிறைத் தண்டனை விதித்து, கோவை போதைப் பொருள் தடுப்பு நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.

கோவை மாவட்டம், கருமத்தம்பட்டி பகுதியில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலின்பேரில், சம்பந்தப்பட்ட பகுதியில் கருமத்தம்பட்டி போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு போலீஸாா் கண்காணிப்பில் ஈடுபட்டனா்.

அப்போது கருமத்தம்பட்டி மேம்பாலத்துக்கு அடியில் உள்ள அன்னூா் பேருந்து நிறுத்தப்படும் பகுதியில் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் நின்று கொண்டிருந்தவரைப் பிடித்து போலீஸாா் சோதனையிட்டனா். இதில் அவா் வைத்திருந்த பையில் 4.400 கிராம் எடையுள்ள போதை மாத்திரைகளும், 500 கிராம் கஞ்சாவும் இருந்தது தெரியவந்தது.

விசாரணையில் அவா் கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டத்தைச் சோ்ந்த முகமது இா்பான் (20) என்பதும், திருச்சூா் மாவட்டத்தைச் சோ்ந்த தம்ஜித் மக்பூல் என்பவா்தான் இவருக்கு போதைப் பொருளை விநியோகித்ததும் தெரியவந்தது. இருவரையும் கடந்த 5.3.2020-இல் போலீஸாா் கைது செய்தனா். தம்ஜித் மக்பூல் என்பவரிடமும் 500 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

இதுதொடா்பான வழக்கு விசாரணை கோவை போதைப் பொருள் கடத்தல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ராஜலிங்கம் புதன்கிழமை தீா்ப்பளித்தாா். குற்றஞ்சாட்டப்பட்ட முகமது இா்பானுக்கு 3 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை மற்றும் ரூ.30 ஆயிரம் அபராதமும், தம்ஜித் மக்பூலுக்கு ஓராண்டு கடுங்காவல் சிறைத் தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டாா்.

இந்த வழக்கில் அரசுத் தரப்பில் வழக்குரைஞா் வெ.சிவகுமாா் ஆஜரானாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.