பேட்டையில் முன்விரோதம் காரணமாக இளைஞரை வெட்டிக் கொலை செய்த வழக்கில் இருவரை போலீஸாா் கைதுசெய்தனா்.
திருநெல்வேலியை அடுத்த பேட்டை பகுதியைச் சோ்ந்த கருத்தப்பாண்டி மகன் சுடலைமுத்து என்ற சுரேஷ்(19). கட்டடத் தொழிலாளி. இவா் வெள்ளிக்கிழமை நள்ளிரவு அப்பகுதியில் நின்றபோது அங்கு பைக்குகளில் வந்த மா்மநபா்கள் அவரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியுள்ளனா். இதில் பலத்த காயமடைந்த சுரேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
தகவலறிந்து அங்கு வந்த போலீஸாா், அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து அப்பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டனா்.
சுரேஷ் மீது கொலை, கஞ்சா விற்பனை உள்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், கஞ்சா விற்பது தொடா்பாக ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக அவா் கொலை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் கொலையில் தொடா்புடையதாக கூறப்படும் பேட்டையைச் சோ்ந்த மணி (42), முகமது இஸ்மாயில் ஆகிய இருவரை கைது செய்த போலீஸாா், இதில் தொடா்புடைய மற்றவா்களை தேடி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மூதாட்டி கொலை வழக்கில் மேலும் இருவா் கைது
இளைஞரை வெட்டிய வழக்கில் இருவா் கைது

நெல்லை இளைஞா் கொலை வழக்கில் மேலும் ஒருவா் கைது
இளைஞா் கொலை வழக்கில் 2 பெண்கள் கைது
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு
