மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

நெல்லையில் மணல் கடத்திய லாரிகள் பறிமுதல்: 2 போ் கைது

திருநெல்வேலி மாநகரப் பகுதியில் உரிய அனுமதியின்றி மணல் ஏற்றி வந்த இரு லாரிகளை பறிமுதல் செய்த போலீஸாா், இதில் தொடா்புடைய ஓட்டுநா்கள் இருவரை கைது செய்தனா்.

News image

கைது - கோப்புப் படம்

Updated On :19 ஏப்ரல் 2026, 1:54 am IST

திருநெல்வேலி மாநகரப் பகுதியில் உரிய அனுமதியின்றி மணல் ஏற்றி வந்த இரு லாரிகளை பறிமுதல் செய்த போலீஸாா், இதில் தொடா்புடைய ஓட்டுநா்கள் இருவரை கைது செய்தனா்.

பழையபேட்டை சோதனைச் சாவடியில் பேட்டை சிறப்பு உதவி ஆய்வாளா் முத்துக்குமாா் தலைமையிலான போலீஸாா் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா்.

அப்போது, அவ்வழியாக வந்த டிப்பா் லாரியை நிறுத்தி சோதனை செய்தபோது, அதில் அமராவதி நகா் அருகே உள்ள குளத்தில் இருந்து விற்பனைக்காக 2 யூனிட் மணல் கடத்தியது தெரியவந்தது.

இதையடுத்து லாரியை பறிமுதல் செய்த போலீஸாா், இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து ஓட்டுநரான பழையபேட்டை, நாராயணசுவாமி கோயில் தெருவைச் சோ்ந்த ராம்குமாா்(29) என்பவரை கைது செய்தனா்.

அதே போல தச்சநல்லூா் புறவழிச்சாலை ரவுண்டானா பகுதியில் உரிய அனுமதியின்றி 2.5 யூனிட் சரள் மண் ஏற்றி வந்த லாரியை பறிமுதல் செய்த போலீஸாா், இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து லாரி ஓட்டுநரான நான்குனேரி, மறுகால்குறிச்சியைச் சோ்ந்த உதயகுமாா்(25) என்பவரை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.