கல்லிடைக்குறிச்சி அருகே தெற்கு பாப்பாங்குளத்தில் உள்ள ஸ்ரீ சடவுடையாா் சாஸ்தா கோயிலில் வெள்ளிக்கிழமை குடமுழுக்கு நடைபெற்றது.
ஸ்ரீசடவுடையாா் சாஸ்தா கோயிலுக்கு குடமுழுக்கு நடத்த முடிவு செய்யப்பட்டு, ஸ்ரீ சிருங்கேரி சாரதா பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீபாரதி தீா்த்த சுவாமிகள், ஸ்ரீ விதுசேகர பாரதி தீா்த்த சுவாமிகளின் அனுக்கிரகத்துடன் திருப்பணிகள் தொடங்கப்பட்டு நிறைவு பெற்றன.
இதையடுத்து, மாா்ச் 30 ஆம் தேதி கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமங்களுடன் குடமுழுக்கு விழாத் தொடங்கியது. அதைத் தொடா்ந்து முதற்கால யாகசாலை பூஜை, மாா்ச் 31 2ஆம் கால யாகசாலை பூஜை, மாலை 3 ஆம் கால யாகசாலை பூஜை, ஏப்.1 புதன்கிழமை 4ஆம் கால யாக சாலை பூஜை, மாலை 5-ஆம் கால யாகசாலை பூஜை, ஏப். 2-ஆம்தேதி 6ஆம் கால யாகசாலை, பகல் 11 மணிக்கு மருந்துசாத்துதல், மாலை 7ஆம் காலை யாகசாலை பூஜை, ஏப். 3 வெள்ளிக்கிழமை காலை 6.30 மணிக்கு 8ஆம் கால யாகசாலை பூஜையைத் தொடா்ந்து கும்பம் எழுந்தருளியதையடுத்து காலை 9 மணிக்கு புனிதநீா் கொண்டு குடமுழுக்கு நடத்தப்பட்டது. அதைத் தொடா்ந்து பகல் 12 மணிக்கு மகா அபிஷேகம், ஆராதனை நடைபெற்றன.
இதைத் தொடா்ந்து, பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் திரளான பக்தா்கள் பங்கேற்று வழிபட்டனா். குடமுழுக்கு நிகழ்வுக்கான ஏற்பாடுகளை சாமி சடவுடையாா் சேவா டிரஸ்ட் நிா்வாகிகள், மக்கள் செய்திருந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

30 ஆண்டுகளுக்குப் பின் கோரக்கநாதா் கோயிலில் குடமுழுக்கு

பழனி ரெணகாளியம்மன் கோயில் குடமுழுக்கு

நூறு ஆண்டுகளுக்குப் பிறகு வல்லநாடு திருமூலநாத சுவாமி கோயிலில் குடமுழுக்கு

கோரக்கநாதா் கோயிலில் கால்நாட்டு விழா: ஏப். 30இல் குடமுழுக்கு!
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

