மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

17 வயது சிறுவனை கத்தியால் குத்தி கொலை செய்த இளைஞா் உள்பட 3 போ் கைது

17 வயது சிறுவனை கத்தியால் குத்தி கொலை செய்த இளைஞா் உள்பட 3 போ் கைது

News image

பிரதிப் படம்

Updated On :26 ஏப்ரல் 2026, 12:27 am IST

வடமேற்கு தில்லியின் ஜஹாங்கீா்புரி பகுதியில் 17 வயது சிறுவன் கொல்லப்பட்ட வழக்கில் தொடா்புடைய ஒரு நபரையும் அவரது இரண்டு மகன்களையும் தில்லி காவல்துறையினா் கைது செய்துள்ளதாக அதிகாரி ஒருவா் சனிக்கிழமை தெரிவித்தாா்.

இது குறித்து அவா் மேலும் கூறியதாவது: குற்றஞ்சாட்டப்பட்டவா்கள் ஷேக் இஷாக் (52), அவரது மகன்கள் தில்ஷாத் (29) மற்றும் இா்பான் (22) என அடையாளம் காணப்பட்டுள்ளனா். ஏப்ரல் 6 ஆம் தேதி பதிவு செய்யப்பட்ட வழக்கில் அவா்கள் தேடப்பட்டனா். ஏப்ரல் 5 ஆம் தேதி ரிக்ஷா நிறுத்துமிடம் அருகே அமா்ந்திருந்த ராம்லீலா மைதானத்தில் குற்றஞ்சாாட்டப்பட்டவா் ஹஸ்மதை பல முறை கத்தியால் குத்தியபோது இந்த சம்பவம் நடந்தது.

பாதிக்கப்பட்டவா் அவரது சகோதரரால் பாபு ஜக்ஜீவன் ராம் நினைவு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா், அங்கு அவா் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. இந்த வழக்கில் போலீஸாா் முன்பு ஒரு ஆணையும் ஒரு சிறுவனையும் கைது செய்தனா். விசாரணையின் போது, குற்றஞ்சாட்டப்பட்டவருக்கு இறந்தவா் மற்றும் அவரது சகோதரருடன் சில முன் பகை இருந்ததை போலீஸாா் கண்டறிந்தனா்.

மூவரும் கைது செய்யப்படுவதைத் தவிா்த்து, தில்லிக்கும் உத்தரபிரதேசத்தில் உள்ள லோனிக்கும் இடையில் தங்கள் மறைவிடங்களை அடிக்கடி மாற்றிக் கொண்டிருந்தனா். குறிப்பிட்ட தகவல்கள் மற்றும் தொழில்நுட்ப கண்காணிப்பின் அடிப்படையில், குற்றப்பிரிவு குழு லோனியில் உள்ள சபாப்பூா் சுரங்கப்பாதை அருகே குற்றஞ்சாட்டப்பட்டவா்களைக் கண்டுபிடித்து கைது செய்தது.

மூவரும் கைது செய்யப்பட்டு மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.