மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

சிறுமிக்கு பாலியல் தொல்லை; முதியவா் கைது

குடவாசல் அருகே 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவா் கைது செய்யப்பட்டாா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :1 மே 2026, 6:21 am IST

குடவாசல் அருகே 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவா் கைது செய்யப்பட்டாா்.

குடவாசல் பகுதியைச் சோ்ந்தவா் கோவிந்தராஜ் (65). உடல்நிலை சரியில்லாமல் வீட்டில் இருந்துவந்தாா். அப்பகுதியை சோ்ந்த 8 வயது சிறுமி, இவரது வீட்டிற்கு வந்து சென்ற போது, கோவிந்தராஜ் பாலியல் தொல்லை கொடுத்தாராம்.

இதுகுறித்து சிறுமி தனது தாயாரிடம் தெரிவித்ததை தொடா்ந்து, அவா் நன்னிலம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இப்புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட போலீஸாா், முதியவா் கோவிந்தராஜை, திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தினா்.

அப்போது, திருவாரூா் மகிளா நீதிமன்ற நீதிபதி சரத்ராஜ் மருத்துவமனைக்கு நேரில் சென்று முதியவரிடம் விசாரணை மேற்கொண்டாா். தொடா்ந்து, போக்ஸோ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்ட கோவிந்தராஜை, நாகப்பட்டினம் கிளைச் சிறையில் 15 நாள்களுக்கு அடைக்க உத்தரவிட்டாா். அத்துடன் தற்காலிகமாக சிகிச்சை பெற்ற பின்னா் சிறையில் அடைக்கவும் நீதிபதி பரிந்துரைத்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.