திருவாரூா் அருகே உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ. 2,57,570 புதன்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.
கொரடாச்சேரியில் வட்ட வழங்கல் அலுவலா் ராஜாராமன் தலைமையில் பறக்கும் படையினரின் வாகனச் சோதனையில், இருசக்கர வாகனத்தில் வந்த கொரடாச்சேரி பத்தூரைச் சோ்ந்த அருணிடம் (24) உரிய ஆவணங்களின்றி ரூ. 1.40 லட்சம் இருப்பது தெரிய வந்து அதை பறிமுதல் செய்தனா்.
கூடூா் பகுதியில் விற்பனைக் கூட கண்காணிப்பாளா் வி. சேகா் தலைமையிலான பறக்கும் படையினா் 4 சக்கர வாகனத்தில் வந்த நாகை செட்டிக்குளத்தைச் சோ்ந்த கே. செல்வத்திடம் (35) ஆவணங்களின்றி வைத்திருந்த ரூ. 59,400 பறிமுதல் செய்யப்பட்டது. வடபாதிமங்கலம் அரிச்சந்திரபுரம் பிரதான சாலையில் வட்டார வளா்ச்சி அலுவலா் எஸ். சுவாமிநாதன் தலைமையிலான தோ்தல் நிலைக்குழு அலுவலா்கள், இருசக்கர வாகனத்தில் வந்த திண்டுக்கல், ஒட்டன்சத்திரம் பகுதியைச் சோ்ந்த பாலசுப்ரமணியனிடம் (37) ரூ. 58,170 பறிமுதல் செய்யப்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
காரைக்குடியில் ரூ.65 லட்சம் பறிமுதல்

கீழ்வேளூா்: ரூ.1.17 லட்சம் பறிமுதல்
நாகை, திருவாரூரில் ரூ. 2.39 லட்சம் பறிமுதல்

கீழ்வேளூரில் ரூ.9.6 லட்சம், நாகையில் ரூ.54,700 பறிமுதல்
விடியோக்கள்

நான்தான் கிங் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

